News May 8, 2025
மகளிர் தொகை: புதிய ரேஷன் அட்டைதாரருக்கு முன்னுரிமை

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ₹ 1,000 மாநில அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் வருகிற ஜூன் மாதம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அப்போது புதிதாக ரேஷன் அட்டைகள் வாங்கிய குடும்ப பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசின் ஆட்சியில் 18.46 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கலாம் எனத் தெரிகிறது.
Similar News
News August 11, 2025
ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ‘கூலி’

‘கூலி’ படத்தின் ப்ரீ புக்கிங் சில நாள்களுக்கு முன்பு அனைத்து இடங்களிலும் ஓபன் ஆனது. அந்த வகையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இப்படம் ₹60 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 14-ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில், ரிலீஸுக்கு முன்னரே கண்டிப்பாக ₹100 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?
News August 11, 2025
இனி இளம் வழக்கறிஞர்களின் காலம்… அமலாகும் புதிய விதி

சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் அவசர வழக்காக இம்மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை இளம் வழக்கறிஞர்கள் மட்டுமே வைக்க முடியும். மூத்த வழக்கறிஞர்களுக்கு இந்த வாய்ப்பு இனி கிடையாது. கடந்த 6-ம் தேதி இந்த உத்தரவையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பிறப்பித்தார். ஐகோர்ட்டுகளில் இதே முறையை பின்பற்றுவது தொடர்பாக அந்தந்த தலைமை நீதிபதிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
BJP நட்பை விரும்பாத OPS.. விஜய்யுடன் கூட்டணியா?

தமிழகம் வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷை சந்திக்க வருமாறு OPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பை அவர் தவிர்த்துவிட்டு, சொந்த ஊரிலேயே தங்கிவிட்டாராம். BJP மீது அதிருப்தியில் இருந்த அவருடன் TTV சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், OPS தரப்பு பாஜகவுடன் மீண்டும் இணைவதை விரும்பவில்லையாம். அதுமட்டுமல்லாமல், கூட்டணி மாறும் (விஜய்) முடிவில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.