News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News December 14, 2025
முட்டை விலை மீண்டும் புதிய உச்சம்

முட்டை விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த நாள்கள் மட்டும் 15 காசுகள் உயர்ந்துள்ள நிலையில், நாமக்கல் கோழிப் பண்ணை வரலாற்றில் முதன்முறையாக 1 முட்டையின் கொள்முதல் விலை ₹6.25 ஆக உயர்ந்துள்ளது. கோழித் தீவன பொருள்களின் விலையேற்றமே, கொள்முதல் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதன்மூலம், சில்லறை விலையில் 1 முட்டை ₹8-க்கு மேல் விற்க வாய்ப்புள்ளது. உங்க பகுதியில் விலை என்ன?
News December 14, 2025
தொடர் விடுமுறை.. சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்

சபரிமலை கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, 30 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 18 ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜன.14-ம் தேதி மகரஜோதி விழா நடைபெறும் வரை கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
News December 14, 2025
தமிழகத்தில் SIR படிவ பதிவேற்றம் நிறைவு

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழகத்தில் SIR படிவங்களை நிரப்பி அளிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். இதனிடையே, நவ.4 முதல் பெறப்பட்ட SIR படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


