News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News January 21, 2026
NASA உங்கள் பெயரை சந்திரனுக்கு அனுப்புகிறது

Artemis II பயணத்துக்காக ஒரு சிறப்பு திட்டத்தை NASA தொடங்கியுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களது பெயரை பதிவுசெய்யலாம். பதிவுசெய்த பெயர்கள் டிஜிட்டல் மெமரி கார்டில் சேமிக்கப்பட்டு, ஆர்டெமிஸ் II பயணத்தில் சந்திரனுக்கு அனுப்பப்படும். ஜனவரி 21-ம் தேதியே பதிவு செய்ய கடைசி நாள். பதிவு செய்த பின், NASA உங்களுக்கு ஒரு டிஜிட்டல் போர்டிங் பாஸ் தரும். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.
News January 21, 2026
BREAKING: திமுகவில் இணைகிறார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த அதிர்ச்சியில் இருந்தே ஓபிஎஸ் இன்னமும் வெளியே வரவில்லை. இந்நிலையில், அவரது வலதுகரமாக விளங்கிய வைத்திலிங்கமும் திமுகவிற்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் திமுகவில் இணைவார் என கூறப்படுகிறது. 2021-ல் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
News January 21, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 587 ▶குறள்: மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. ▶பொருள்: மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.


