News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 20, 2026
விஜய் பேசிய டயலாக்குக்கு Copyrights கோரும் சீமான்

TN அரசு மகளிருக்கு வழங்கிய ₹5,000 தனக்கு பயந்துதான் என விஜய் அவராகவே நினைத்துகொள்கிறார் என சீமான் விமர்சித்துள்ளார். பிஹாரில் மகளிருக்கு பாஜக வழங்கிய ₹10 ஆயிரமும் விஜய்க்கு பயந்து தானா என கிண்டலடித்துள்ளார். மேலும், தனித்து கட்சி ஆரம்பித்தேன் என விஜய் பேசுவது தன்னுடைய டயலாக் எனவும், நான் தான் சாதாரணமாக வந்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்து நிற்கிறேன் என்றும் அவர் பேசியுள்ளார்.
News February 20, 2026
பிரேமலதாவுடன் கூட்டணி.. திமுகவுக்கு அடுத்த ஏமாற்றம்

திமுக கூட்டணியில் இணைந்த கையோடு, தேர்தலிலும் போட்டியிடுவேன் என பிரேமலதா அறிவித்துள்ளார். விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம் தொகுதியிலேயே அவரும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இதனால் அத்தொகுதியின் சிட்டிங் திமுக MLA கலக்கத்தில் உள்ளாராம். தேர்தலுக்காக பல பணிகளைச் செய்துள்ள நிலையில், இந்த கூட்டணியால் MLA-வின் ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
News February 20, 2026
கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்: காங்., குறித்து வைகோ

மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாக பேசுகிறார், அவர் பேசும் வார்த்தைகள் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துகிறது என வைகோ விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம் என்ற அவர், உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிக்கப்பட்டிருக்கும், அது புதிதல்ல என்றார். மேலும், காங்கிரஸார் சொல்வதை எல்லாம் திமுக பொருட்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.


