News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 8, 2026
சசிகலாவால் 5 முனைப் போட்டியா?

திமுக+, அதிமுக+, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவும் நிலையில், சசிகலாவும் தனித்து போட்டியிடுவது குறித்து, தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனித்து போட்டியிட்டால் தமிழக அரசியலில் ஏற்படும் தாக்கம் குறித்தும் கேட்கிறாராம். அமமுகவிலிருந்து விலகி சமீபத்தில் சசிகலாவுடன் இணைந்த ஜீவிதா நாச்சியாரிடம் தேர்தலில் போட்டியிடுவீர்களா என அவர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
News February 8, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரேயடியாக ₹40,000 குறைந்தது

கடந்த வாரத்தில் தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களுடன் பூச்சாண்டி காண்பித்தது. தங்கம் விலை சவரனுக்கு ₹11,400 வரை குறைந்த அதேநேரத்தில் ₹3,840 உயர்ந்தது. அதேபோல், வெள்ளி விலையும் 1 கிலோவுக்கு ₹40,000 வரை குறைந்த நிலையில், ₹5,000 உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, 1 சவரன் தங்கம் ₹1,15,360-க்கும், 1 கிலோ வெள்ளி ₹2.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
News February 8, 2026
காதலியுடன் சிக்கிய கணவன்..

காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் காதலியுடன் சிக்கியுள்ளார். திருவள்ளூர், அத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த கவுசல்யா(20) திருமணமான 5 மாதங்களில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கவுசல்யாவின் அத்தை மகனும் கணவருமான ராஜேஷ்(30) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் தனது காதலி தீபிகா(21) உடன் சேர்ந்து கவுசல்யாவை ராஜேஷ் அடித்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. So Sad!


