News April 29, 2025

எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

image

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

Similar News

News February 12, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 607▶குறள்: இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். ▶பொருள்: முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

News February 12, 2026

அதிமுகவுக்கு விஜய் ஒரு பொருட்டே அல்ல: EPS

image

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ‘ஆட்சியில் பங்கு’ குறித்த கேள்விக்கு, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று EPS பதிலளித்துள்ளார். விஜய் தொடர்பான கேள்விக்கு, சினிமாவில்தான் ஹீரோ, ஆனால் அரசியலில் கேள்விக்குறிதான். அதிமுகவுக்கு தவெக தலைவர் விஜய் ஒரு பொருட்டே அல்ல எனக் கூறிய அவர், எம்ஜிஆர் பெயரை சொல்லித்தான் அவர் (விஜய்) கட்சியே நடத்துகிறார் எனவும் விமர்சித்தார்.

News February 12, 2026

ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? அருண்ராஜ்

image

ஆட்சியில் பங்கு தரமாட்டோம் <<19108663>>முதல்வரால்<<>>, திமுக தனித்து போட்டியிடும் என்று சொல்ல முடியுமா என்று தவெகவின் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். CM ஸ்டாலின் இன்று அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால்தான் திமுகவுடையது, மீதி 3 கால்கள் கூட்டணி கட்சிகளுடையது. கூட்டணி கட்சிகளை வெறும் ஒட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி அதிகாரப் பகிர்வு அளிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரான செயல் எனவும் விமர்சித்தார்.

error: Content is protected !!