News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News December 19, 2025
மீண்டும் சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு, CBCID போலீசார் ஆஜராகினர். ஆனால், தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 3 பேர் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். கோடநாடு வழக்கின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
News December 19, 2025
யார் இந்த ஷெரிஃப் உஸ்மான் ஹாடி?

ஒட்டுமொத்த <<18609087>>வங்கதேசத்தையும் மீண்டும் கலவர பூமியாக<<>> மாற்றியுள்ளது, ஷெரிஃப் உஸ்மான் ஹாடியின் மரணம். இவர் முன்னின்று நடத்திய போராட்டமும் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததற்கு ஒருவித காரணமாகும். உஸ்மான் ஹாடி ஆற்றிய உரைகளால் ஈர்க்கப்பட்ட Gen Z தலைமுறை அவரை ஹீரோவாக கொண்டாட தொடங்கியது. அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட தயாராகி வந்த நிலையில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
News December 19, 2025
2 ஆண்டு சிறை தண்டனை.. அமைச்சர் ராஜினாமா

மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மகாராஷ்டிர அமைச்சர் மாணிக்ராவ் கோகடே தனது பதவியை ராஜினாமா செய்தார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த இவர் விளையாட்டு, இளைஞர் நலன் துறைகளின் அமைச்சராக இருந்தார். 1989 – 1992 காலகட்டத்தில் ₹30,000-க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கான திட்டத்தில், போலி ஆவணங்கள் மூலம் அப்ளை செய்ததே தற்போது பதவி பறிபோக காரணமாக அமைந்துள்ளது.


