News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News January 29, 2026
பாரதிதாசன் பொன்மொழிகள்

*கலை உயர்ந்து இருக்க, எண்ணங்களும் உயர்ந்து இருக்க வேண்டும். புதியதோர் உலகம் செய்வோம் கெட்டபோரிடும் உலகத்தை சாய்ப்போம். *செயலை செய்ய எண்ணித் துணிபவனுக்கே வெற்றி கிடைக்கும். *எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. *நன்மை கொடுக்கும் கல்வி இல்லாத வீடு இருண்ட வீடு!
News January 29, 2026
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: EPS

சென்னை தரமணியில் பீகார் மாநில இளைஞர், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் வந்தாரை வாழவைக்கும் TN-ல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுவதாகவும், இந்த கொடூர கொலைகளுக்கு பொம்மை CM என்ன சொல்ல போகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
News January 29, 2026
மக்கள் மனம் வென்ற டாப் 3 அலங்கார ஊர்திகள்!

2026 குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாநில அலங்கார ஊர்திகளுக்கான பரிசை மத்திய அரசு அறிவித்துள்ளது. வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் என்ற கருப்பொருளுடன் TN உட்பட 30 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இந்நிலையில் Mygov இணையதளத்தில் மக்கள் வாக்களித்ததன் அடிப்படையில் தற்போது முடிவுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறந்த 3 அலங்கார ஊர்திகள் எவை என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கலாம்.


