News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News January 22, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்? முடிவை அறிவித்தார்

‘ஜன நாயகன்’ பட சென்சார் விவகாரம், கரூர் வழக்கில் CBI விசாரணை ஆகியவற்றை கொண்டு விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுபோன்ற கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல தங்களுக்கு நேரமில்லை என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். மக்கள் தங்களுடன் உள்ளதாகவும், 2026-ல் நிச்சயம் விஜய் முதல்வர் ஆவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
இந்த நம்பரை அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!

MyGov உதவி மையத்தின் ‘+91-9013151515’ என்ற எண்ணை போனில் Save செய்யுங்கள் *இந்த எண்ணுக்கு WhatsApp-ல் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள் *அதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக ஆதார் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது எளிய வழி என்றாலும், இந்த முறையில் ஆதார் அட்டையை பெற, முன்னதாக நீங்கள், DigiLocker-ல் ஆதாரை பதிவேற்றம் செய்து வைக்க வேண்டியது அவசியம். இந்த பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 22, 2026
கருணை குடும்ப ஓய்வூதியம் ₹2,250 ஆக உயர்வு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணை குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கருணை ஓய்வூதியம் ₹4,500-லிருந்து ₹5,000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ₹2,000-லிருந்து ₹2,250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


