News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 25, 2026
வரியை 126% ஆக உயர்த்திய டிரம்ப்

இந்தியாவின் சோலார் பேனல்களுக்கு 126% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இதன் விலை USA-ல் இருமடங்காக உயரும். சோலார் உற்பத்திக்கு இந்திய அரசு நியாயமற்ற மானியங்கள் வழங்குவதால் US உற்பத்தியாளர்களை விட இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிக லாபம் பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய பொருள்களுக்கு USA-ல் வரிகள் குறையும் என கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 25, 2026
தேர்வுக்கு இடையே குழந்தை பெற்ற பள்ளி மாணவி.. அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தின் பிதாம்பூரில் தனியார் பள்ளியில் கணித தேர்வு எழுதி கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது. தேர்வுக்கு இடையே கழிப்பறைக்கு மாணவி சென்ற சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அங்குச் சென்ற டீச்சர்கள் மாணவி, குழந்தை இருவரையும் மீட்டு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். 14 வயது மகளுக்கு நடந்த அவலத்தை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
News February 25, 2026
அண்ணன் வீராசாமி மரணம்: இபிஎஸ் உருக்கமாக இரங்கல்

அதிமுக <<19234003>>EX அமைச்சர் வெள்ளூர் வீராசாமி<<>> மறைவுக்கு EPS உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், MGR காலத்திலேயே ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சர் பதவி வகித்த, அண்ணன் வீராசாமியின் மறைவு வேதனையளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். வீராசாமியின் உடலுக்கு அதிமுகவினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


