News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 4, 2026
டெல்லியிலிருந்து தேமுதிகவுக்கு அழைப்பு: பிரேமலதா

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தோழமை கட்சிகள் தான் என பிரேமலதா தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில், ஜன.26-ல் நடந்த குடியரசுத் தின விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் தேர்தல் பிரசாரம் காரணமாக போக முடியவில்லை என்றார். மேலும், கட்சியின் எதிர்காலம் கருதியே எங்கள் கூட்டணி இருக்கும் என்றும், அதற்காக ஒருவரிடம் பேசினாலே அது கூட்டணி ஆகிவிடாது எனவும் கூறியுள்ளார்.
News February 4, 2026
‘அப்பா நாங்க 3 பேரும் சாகப் போகிறோம்’

குழந்தைகளை ஒழுங்காக கவனிக்காவிட்டால் பெற்றோருக்கு ஏற்படும் பேரிழப்பை உ.பி.,யின் காசியாபாத்தில் நிகழ்ந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கொரோனா காலத்தில் செல்போனில் கொரியன் வீடியோ கேம்களுக்கு அடிமையான தனது பிள்ளைகளை தந்தை சேதன் குமார் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த பாக்கி(12), பிராச்சி(14), விஷிகா(16) மூவரும், கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்று 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
News February 4, 2026
சசிகலாவை மீண்டும் சேர்க்க மாட்டோம்: EPS

EPS தலைமையை ஏற்று, NDA-வில் இணைந்த TTV, சசிகலாவும் தங்கள் கூட்டணிக்கு ஆதரவளிப்பார் என கூறியிருந்தார். இதனால், சசிகலா விஷயத்தில் EPS என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அதிமுகவுக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ, அவர்களெல்லாம் துரத்தி விடப்பட்டவர்கள்; சசிகலா குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி யூகங்களுக்கு EPS முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


