News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 13, 2026
நாமக்கல்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News February 13, 2026
நான் வீசிய Bomb தாறுமாறா வெடிக்குது: விஜய்

விக்ரவாண்டி மாநாட்டில் தான் வீசிய Political Bomb அனைத்து கூட்டணியிலும் தற்போது வெடித்துக்கொண்டிருப்பதாக விஜய் கூறியுள்ளார். CM ஸ்டாலின் பதறுவதாக கூறிய அவர், ஆட்சியில் பங்கு TN-க்கு ஒத்துவராது என CM சொல்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அமைக்க மட்டுமே கூட்டணி எனவும் மற்றவைக்கு அவர்கள் தனி அணி எனவும் விமர்சித்துள்ளார்.
News February 13, 2026
மேலும் ₹500 உயர்வு.. ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி

ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இத்தொகை ₹1,500 ஆக உயர்த்தப்படும் என சமீபத்தில் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒருகால பூஜை நடத்தும் அர்ச்சகர்களுக்கு ₹1,500 வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்திற்கு ₹25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


