News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News January 8, 2026
மதிய உணவு சாப்பிட்டாச்சா… இதை பாருங்க!

மதிய உணவுக்கு பின், சிறிது நேரம் ‘Power Nap’ எனப்படும் குட்டித்தூக்கம் போடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்கிறது University college london நடத்திய ஆய்வுமுடிவு. இது ஞாபகசக்தியை மேம்படுத்தி, வேலையில் விழிப்புணர்வுடன் இருக்கவும் உதவுகிறதாம். இந்த குட்டித் தூக்கத்தால், இரவுத் தூக்கம் பாதிக்காதாம். ஆனால், இந்த Power Nap, 15-20 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. இப்பவே, ஆபீஸ் டேபிளில் சாயத் தோணுதா?
News January 8, 2026
கௌரவத்தை இழந்துவிட்டு, T20I WC விளையாடணுமா..

நாட்டின் கெளரவத்தையும் இழந்துவிட்டு இந்தியாவில் T20I WC விளையாட வேண்டுமா என <<18785386>>வங்கதேச <<>>விளையாட்டுத்துறை ஆலோசகர் கேள்வி எழுப்பியுள்ளார். வீரர்களின் பாதுகாப்பை தாண்டி, இது நாட்டின் ‘தேசிய அவமானம்’ சம்பந்தப்பட்ட விஷயமாகவும் மாறிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா சென்று விளையாடவில்லை என்றால், T20I WC-யை விளையாடும் வாய்ப்பை இழக்கலாம் என ICC வங்கதேசத்திற்கு தெரிவித்தாக கூறப்படுகிறது.
News January 8, 2026
ஆரஞ்சு அலர்ட்.. 2 நாள்களுக்கு கனமழை வெளுக்கும்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை(ஜன.9) திருவாரூர், நாகை ஆகிய மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடுமாம். மேலும், ஜன.10-ல் நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


