News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 19, 2026
PhonePe-ல் ₹5,000.. வெளியான புது அறிவிப்பு

UPI செயலியில் பணப் பரிவர்த்தனை செய்ய பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, விரல்ரேகை, ஃபேஷியல் ரெகக்னிஷன் பயன்படுத்தி பணம் அனுப்பலாம், PIN தேவையில்லை. தற்போது ₹5,000 வரையான தொகைக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை பெற PhonePe ஆப் புரஃபைலில் Manage Payments-ஐ கிளிக் செய்து Biometric Pay ஐகானை Enable செய்யவும். விரைவில் மற்ற நிறுவனங்களும் இதை கொண்டுவரும் எனத் தெரிகிறது.
News February 19, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு வரும் 21-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதேபோல், பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்கு பிப்.25 அன்று உள்ளூர் விடுமுறையாகும்.
News February 19, 2026
மீண்டும் SIR பணிகள்!

தேர்தலையொட்டி தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் விடுபட்டுள்ள ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR பணிகள் நடைபெறவுள்ளன. வரும் ஏப்ரல் மாதம் முதல் இப்பணிகள் தொடங்கும் என ECI அறிவித்துள்ளது.


