News March 26, 2025

இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?

image

இந்தியா- சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை, விரைவில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியாவிற்கான சீன தூதர் வெய் தெரிவித்துள்ளார். வரும் ஏப்.1ஆம் தேதி, இருநாடுகளுக்கு இடையேயான 75 ஆண்டுகால ராஜதந்திர உறவை கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா, எல்லை மோதல்கள் காரணமாக, இருநாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவை, கடந்த 5 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News

News July 9, 2025

புதுவை CM ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு!

image

சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.

News July 9, 2025

ஆதார் கார்டு முதன்மை அடையாளம் அல்ல: UIDAI

image

ஆதார் கார்டு ஒருபோதும் ஒரு நபரின் முதன்மை அடையாள அட்டை அல்ல என்று UIDAI சிஇஓ புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், போலி ஆதார் அட்டைகளைக் கண்டறிய புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், புதிதாக வழங்கப்படும் ஆதார் கார்டுகளில் உள்ள QR கோடைப் பயன்படுத்தி, இந்த ஆப் மூலம் போலியானதைக் கண்டறியலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News July 9, 2025

கோட்சே வழியில் மாணவர்கள் சென்றுவிடக்கூடாது: ஸ்டாலின்

image

காந்தி, அம்பேத்கர், பெரியார் வழியில் செல்லாமல், கோட்சே கூட்டத்தின் வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் பேசிய அவர், மாணவர்களுக்கு அரசியல் புரிதல் அவசியம் என்றார். தமிழகத்தைக் காக்க மாணவர்கள் ஓரணியில் நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!