News May 1, 2024

இந்தியா வசமாகுமா இலங்கையின் துறைமுகம்?

image

வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா நிதியுதவி உடன் புதுப்பிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்துறைமுகத்தை புதுப்பிக்கும் திட்டத்திற்கு மொத்தம் ₹510 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தை பொது – தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்த இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News March 23, 2026

கடன் தள்ளுபடி இல்லை.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

image

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமெண்டில் அறிவித்துள்ளார். அதேநேரம், கிசான் கடன் அட்டை மூலம் வட்டி மானிய திட்டத்தில் போதுமான அளவு பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருவதாகவும், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவோருக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News March 23, 2026

முகம் Dull-ஆவே இருக்கா? ஒரு பொருள் போதும்

image

என்ன செய்தாலும் முகம் Dull-ஆகவே இருக்கிறதா? முகத்தைப் பொலிவாக வைக்க பச்சைப் பால் போதும். இதற்கு, முதலில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு, இரண்டு டீஸ்பூன் பச்சைப் பாலில், சிறிது தேன் கலந்து நன்றாகக் கலக்கி, அதை முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை, தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும். SHARE.

News March 23, 2026

சாத்தான்குளம் வழக்கில் நெஞ்சை உலுக்கும் உண்மைகள்!

image

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதில் நீதிபதி குறிப்பிட்ட முக்கிய விவரங்கள் இவை: *ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. *நாம் அடித்து பழகுவதற்கு அப்பா – மகன் கிடைத்துள்ளனர்; அடித்து பயிற்சி எடுப்போம் என போலீசார் பேசியுள்ளனர். *இரவு முழுவதும் 10 நிமிடம் இடைவெளி விட்டு கம்பு, கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

error: Content is protected !!