News May 17, 2024
ஓட்ஸ் சாப்பிட்டால் பிரச்னைகள் ஏற்படுமா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பொன்மொழி ஓட்ஸுக்கும் பொருந்தும். ஒரு மனிதர் சராசரியாக ஒரு நாளில் 30-35 கிராம் அளவில் (Instant oats) ஓட்ஸை எடுத்துக் கொள்ளலாம். அதிகளவில் ஓட்ஸ் சாப்பிட்டால், செரிமான அசௌகர்யத்தையும், சர்க்கரை அளவையும் அதிகரிக்கும். மேலும், ஓட்ஸில் இருக்கும் அதிக பாஸ்பரஸ் சத்து, சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு தொந்தரவுகளை வரவழைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News November 3, 2025
அனில் அம்பானியின் ₹3,084 கோடி சொத்துக்கள் முடக்கம்

அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான ₹3,084 கோடி மதிப்பிலான சொத்துகளை ED முடக்கியது. RHFL மற்றும் RCFL நிறுவனங்கள் மூலம் வங்கியில் இருந்து திரட்டப்பட்ட பொது பணத்தை முறைகேடாக கையாண்டதாக ED வழக்குப்பதிவு செய்தது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனில் அம்பானியின் 40-க்கும் மேற்பட்ட சொத்துக்களை முடக்கி ED நடவடிக்கை எடுத்துள்ளது.
News November 3, 2025
தெரு நாய்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் CS நேரில் ஆஜர்!

தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் அரசு தலைமைச் செயலர்கள் கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று SC அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் இன்று(நவ.3) ஆஜரானார். தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நெறிமுறைகளை வகுப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
News November 3, 2025
12 மணிக்கு மேல் வெளியே செல்லாதீங்க

பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 4°© வரை உயரும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக, அடுத்த 5 நாள்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடியில் வரலாறு காணாத வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதால், 12 மணிக்கு மேல் வெளியே செல்வதை தவிர்க்கவும்.


