News April 28, 2025
PTR-க்கு கூடுதல் இலாகா ஒதுக்காதது ஏன்?

அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் இலாகா ஒதுக்காதது பேசுபொருளாகியுள்ளது. பிடிஆரின் நேர்மையான கருத்துகள், அரசியல் மற்றும் உட்கட்சிக்குள் விருப்பமில்லாத பரபரப்பை உருவாக்குவதாக கட்சி தலைமை கருதுகிறது. இது கட்சி நிர்வாகத்திற்கு சற்று சவாலாக இருப்பதால், அவருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Similar News
News February 7, 2026
நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது.. அடுத்தடுத்து அதிர்ச்சி

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு பல கோடி ரூபாய்க்கு அவர் போதைப்பொருள் விற்றது தெரியவந்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் அஞ்சுவுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்த போலீஸ், அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.
News February 7, 2026
TOSS: இந்திய அணி பேட்டிங்

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் கத்துக்குட்டி அணியான USA-ஐ இந்திய அணி எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் அபிஷேக், இஷான் கிஷன், சூர்யகுமார், திலக், ஹர்திக், துபே, ரிங்கு, அக்ஷர், அர்ஷ்தீப், வருண், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
News February 7, 2026
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்

செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை தொடர்ந்து மற்றொரு அதிமுக மூத்த நிர்வாகி தவெகவில் இணைந்துள்ளார். வட சென்னையை சேர்ந்த அதிமுக Ex MLA வி.எஸ்.பாபு விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், EPS-க்கு ஆளுமை இல்லை என தெரிவித்ததோடு, அதிமுகவின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.


