News April 28, 2025
PTR-க்கு கூடுதல் இலாகா ஒதுக்காதது ஏன்?

அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் இலாகா ஒதுக்காதது பேசுபொருளாகியுள்ளது. பிடிஆரின் நேர்மையான கருத்துகள், அரசியல் மற்றும் உட்கட்சிக்குள் விருப்பமில்லாத பரபரப்பை உருவாக்குவதாக கட்சி தலைமை கருதுகிறது. இது கட்சி நிர்வாகத்திற்கு சற்று சவாலாக இருப்பதால், அவருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Similar News
News March 15, 2026
ஒரு மாவட்டமே திமுகவுக்கு கிடையாதா?

தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் புகைச்சல் உண்டாகியுள்ளது. இந்நிலையில், நாகையில் உள்ள 3 தொகுதிகளும் கூட்டணி கட்சிகளின் வசமே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், திமுகவினர் அதிருப்தியில் உள்ளனராம். 2 தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒரு தொகுதியை காங்., கட்சியும், மேலும், விசிகவும் ஒரு தொகுதியை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News March 15, 2026
தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வைகோ ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக உருவான கட்சி (TVK) அதிமுக கூட்டணிக்கு சென்றாலும், திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
News March 15, 2026
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்த பாகிஸ்தான்!

மத்திய கிழக்கு நாடுகளின் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 30% அளவுக்கு குறைக்க PM ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசுத்துறை வாகனங்களுக்கான எரிபொருளை 50% குறைக்க வேண்டும் என்றும், 60% வாகனங்களை 2 மாதங்களுக்கு இயக்க வேண்டாம் எனவும் அவர் ஆணையிட்டுள்ளார்.


