News April 28, 2025
PTR-க்கு கூடுதல் இலாகா ஒதுக்காதது ஏன்?

அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் இலாகா ஒதுக்காதது பேசுபொருளாகியுள்ளது. பிடிஆரின் நேர்மையான கருத்துகள், அரசியல் மற்றும் உட்கட்சிக்குள் விருப்பமில்லாத பரபரப்பை உருவாக்குவதாக கட்சி தலைமை கருதுகிறது. இது கட்சி நிர்வாகத்திற்கு சற்று சவாலாக இருப்பதால், அவருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Similar News
News August 25, 2025
கால் நகத்தை விற்று காசு பார்க்கும் பெண்..வினோதம்!

வரட்டி, விரலுக்கு க்ளவுஸ் என வித்தியாசமான பொருள்களை ஆன்லைனில் விற்பவர்களை நாம் பார்த்திருப்போம். அதேபோல, தனது கால் நகங்களை விற்று 1 வாரத்திற்கு ₹5 லட்சம் வரை சம்பாதிக்கிறார் லண்டனை சேர்ந்த லதீஷா ஜோன்ஸ் எனும் 24 வயதான பெண். இவரிடம் இருந்து நகத்தை வாங்கும் ஒரு கஸ்டமர், அதனை பவுடராக அரைத்து, உணவில் உப்புக்கு பதில் அதை சேர்த்து சாப்பிடுகிறாராம். இதைப்பற்றி உங்க கருத்த சொல்லிட்டு போங்க..
News August 25, 2025
தன்கர் விவகாரத்தில் ஆராய்ச்சி செய்யாதீர்: அமித்ஷா காட்டம்

ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. இந்நிலையில், தன்கர் துணை ஜனாதிபதியாக இருந்தபோது அரசியலமைப்பின்படி சிறப்பாக பணியாற்றினார்; மருத்துவக் காரணங்களுக்காகவே அவர் ராஜினாமா செய்தார் என அமித்ஷா விளக்கமளித்துள்ளார். அவர் குறித்து தேவையற்ற ஆராய்ச்சிகளை செய்து, ஏதோ ஒன்றை கண்டுபிக்க வேண்டும் என நினைப்பது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
ஆசிய கோப்பை இந்திய அணி தேர்வும்.. விமர்சனங்களும்!

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு ரசிகர்களிடம் தொடர் விமர்சனங்களை பெற்று வருகிறது. 2025 IPL-ல் அதிக விக்கெட்களை எடுத்த பிரசித் கிருஷ்ணா(25 விக்கெட்கள்), அதிக ரன்களை குவித்த சாய் சுதர்ஷன்(759 ரன்கள்) ஆகியோருக்கு இடமில்லை. அதே நேரத்தில், அதிக சம்பளம் வாங்கிய ஷ்ரேயஸ் ஐயர், ஜெய்ஸ்வால், KL ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் திறமையை நிரூபித்தும், அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. நீங்க என்ன சொல்றீங்க?