News April 23, 2025

தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

image

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.

Similar News

News November 19, 2025

2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை: திருமாவளவன்

image

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். ஆனால் 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை விசிக திமுகவிடம் வைக்கவில்லை என அவர் இப்போது கூறியுள்ளார். அதேசமயத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை நாங்கள் கைவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

News November 19, 2025

விவசாயிகளுக்கு ₹18,000 கோடி நிதி வழக்கும் PM மோடி

image

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெறும் வேளான் மாநாட்டை PM மோடி தொடங்கி வைக்கிறார். தொடந்து பி.எம். கிசான் திட்டத்தின், 21-வது தவணையான ₹18,000 கோடி உதவித்தொகையை 9 கோடி விவசாயிகளுக்கு வழங்குகிறார். இந்த திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 21,80,204 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மேலும், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு PM மோடி விருது வழங்கி கௌரவிக்கிறார்.

News November 19, 2025

இ பாஸ்போர்ட் வாங்க ரெடியா?

image

புதிய அம்சங்களுடன் சிப் பதிக்கப்பட்ட மின்னணு பாஸ்போர்ட் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் ஆர்எப்ஐடி எனப்படும் ரேடியோ அலை அடையாள சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டிருக்கும். இது உங்கள் பயோமெட்ரிக் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். 2035-க்குள் நாட்டிலுள்ள அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் மின்னணு முறைக்கு மாற்ற அரசு இலக்கு வைத்துள்ளது.

error: Content is protected !!