News April 23, 2025
தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.
Similar News
News November 17, 2025
சபரிமலையில் இன்று முதல் 90,000 பக்தர்களுக்கு அனுமதி

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் 1-ம் தேதியான இன்று தொடங்கி 60 நாட்கள் இந்த சீசன் நடைபெறும். இந்நிலையில் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பேரும், உடனடி தரிசனம் மூலம் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் ஒரு மாத காலத்துக்கான முன்பதிவு இப்போதே முடிவடைந்துவிட்டது.
News November 17, 2025
மன அழுத்தத்தை குறைக்க உதவும் உணவுகள்

மன அழுத்தத்தில் இருந்து நாம் விரைவாக வெளியில் வரவில்லை என்றால் அது தற்கொலை வரை செல்லும் அபாயம் உள்ளது. மேலும் அது உடல் ஆரோக்கியத்தையும் பலவீனமான நிலையையும் உண்டு செய்யலாம். மன அழுத்தம் இருப்பதை உணரும் போது உடனடியாக அதை குறைக்க தேவையான விசயங்கள் நாம் செய்ய வேண்டும். முக்கியமாக ஆரோக்கியமான உணவுகளின் மூலமாகவும் அதை குறைக்கலாம். அப்படியான உணவுகளின் லிஸ்ட்டை மேலே SWIPE செய்து பாருங்கள். SHARE IT
News November 17, 2025
கால்பந்து உலகக் கோப்பைக்கு போர்ச்சுகல் அணி தகுதி

2026 கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றில் போட்டியில் நேற்று போர்ச்சுகல் அணி அர்மேனியாவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி போர்ச்சுகல் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தது. இதனால் 9 – 1 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கு அந்த அணி தகுதி பெற்றது. கடந்த போட்டியில் ரெட் கார்டு பெற்றதால் நட்சத்திர வீரர் ரொனால்டோ இந்த போட்டில் பங்கேற்க முடியவில்லை.


