News April 23, 2025

தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

image

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.

Similar News

News September 13, 2025

1 GB பிளானை நீக்கியது குறித்து விளக்கம் கேட்கும் TRAI

image

எண்ட்ரி லெவல் 1 GB பிளானை நீக்கியது குறித்து ஜியோ, ஏர்டெலிடம் TRAI விளக்கம் கேட்டுள்ளது. இந்த ₹249 பிளானை நீக்கியது கஸ்டமர்களுக்கு மேலதிக சுமைகளை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த பிளான் ஆஃப்லைனில் கிடைப்பதாக ஜியோ தெரிவித்த நிலையில், கஸ்டமர்களின் விருப்ப தேர்வின் அடிப்படையிலேயே பிளான் நீக்கப்பட்டதாக ஏர்டெல் கூறியுள்ளது. தற்போதைய எண்ட்ரி லெவல் பிளான் ₹299 ஆகும்.

News September 13, 2025

திருச்சியில் முதல் பரப்புரை ஏன்… விஜய் விளக்கம்

image

போருக்கு முன்னர் குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்வதைபோல் 2026 தேர்தலுக்கான முதல் களமாக திருச்சியை தேர்வு செய்துள்ளதாக விஜய் கூறியுள்ளார். அரசியலில் பல்வேறு திருப்பங்களை திருச்சி நகரம் கொடுத்துள்ளதாக கூறிய அவர், அறிஞர் அண்ணா தேர்தலில் போட்டியிட விரும்பிய இடம், MGR மாநாடு நடத்திய இடம், பெரியார் வாழ்ந்த இடம் என எப்போதும், திருச்சிக்கு அரசியல் திருப்புமுனை வரலாறு இருப்பதாக கூறினார்.

News September 13, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், தமிழகத்தில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் கனமழை வெளுத்து வாங்குமாம். மேலும், 18-ம் தேதி வரை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கவனமாக இருங்கள்!

error: Content is protected !!