News April 23, 2025
தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.
Similar News
News November 13, 2025
டெல்லியில் மீண்டும் வெடிச்சத்தம்!

டெல்லி, மஹிபால்பூர் பகுதியில் காலை 9.18 மணிக்கு சக்தி வாய்ந்த வெடி சத்தம் கேட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கடந்த 10-ம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இன்னொரு வெடிச்சத்தம் கேட்டுள்ளது. ஆனாலும், இந்த சம்பவத்தின் முழு விவரம் இதுவரை வெளியாகவில்லை.
News November 13, 2025
ECI மீது BJP MLA வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

முறையாக வீடுதோறும் சென்று SIR படிவங்களை பூத் லெவல் ஆபிசர்கள் (BLO) கொடுப்பதில்லை என வானதி குற்றம்சாட்டியுள்ளார். ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு விண்ணப்பங்கள் கொடுப்பதாகவும், முறையாக ஆய்வுசெய்து, படிவத்தை அதற்குரிய வெப்சைட்டில் ஸ்கேன் செய்வது இல்லை என்றும் சாடியுள்ளார். ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என சோதிப்பது இல்லை எனவும் அதிகாரிகளுக்கு சரியான பயிற்சி அளிக்கப்படவில்லை எனவும் சாடியுள்ளார்.
News November 13, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

ஆபரணத் தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று(நவ.13) ஒரே அடியாக ₹1,600 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 உயர்ந்து ₹94,440-க்கும், கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹11,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் ₹94,000 தாண்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


