News April 23, 2025
தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.
Similar News
News November 20, 2025
இந்த வார ஓடிடி விருந்து!

இந்த வாரம் மக்களுக்கு OTT-யில் பெரிய ட்ரீட் தயாராக உள்ளது. அது என்னென்ன என்று பார்க்கலாம். ➤ஜுராசிக் வேர்ல்ட்: கேயாஸ் தியரி சீசன் 4: நவ.20, நெட்பிளிக்ஸ் ➤தி பெங்கால் ஃபைல்ஸ்: நவ.21, Zee5 ➤பைசன்: நவ.21, நெட்பிளிக்ஸ் ➤ஒன் ஷாட் வித் எட் ஷீரன்: நவ.21, நெட்பிளிக்ஸ் ➤தி பேமிலி மேன் 3: நவ.21, அமேசான் பிரைம் ➤நடு சென்டர்: நவ.20, ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
News November 20, 2025
கடையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்குறீங்களா? ALERT!

கடைகளில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் நிறைய எண்ணெய், உப்பு மற்றும் கெமிக்கல்கள் பயன்படுத்தி இருப்பார்கள் என சமையல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதில் இஞ்சி பூண்டுக்கு பதிலாக, மைதா மற்றும் பிற பொருள்களை பயன்படுத்துவார்கள் எனவும் இதனால் ஜீரணம் சார்ந்த பிரச்னைகள், ஃபுட் பாய்சன், அழற்சி போன்ற உடல்நலப் பிரச்னைகள் வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழிப்புணர்வுக்காக SHARE THIS.
News November 20, 2025
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் அதிமுக

கேரளாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளது. கேரளாவில் அடுத்த மாதம் 9, 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், இடுக்கி, பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்களைக் களமிறக்க உள்ளது. இதற்காக முதற்கட்டமாக 28 வேட்பாளர்களையும் EPS அறிவித்துள்ளார்.


