News April 23, 2025
தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.
Similar News
News November 11, 2025
விஜய் கட்சியின் சின்னம்.. நேரில் வழங்கினார்

தவெகவுக்கு பொதுச் சின்னம் கோரும் மனுவை டெல்லியில் உள்ள ECI தலைமை அலுவலகத்தில் CTR நிர்மல்குமார் வழங்கினார். அதில், ECI-ல் ஏற்கெனவே உள்ள ஆட்டோ, விசில், கிரிக்கெட் பேட், சாம்பியன் கோப்பை, கப்பல் ஆகிய சின்னங்களும், தவெக நிர்வாகிகளின் பரிந்துரைகள் மூலம் புதிதாக வரையப்பட்ட 5 சின்னங்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவுக்கு உங்க சாய்ஸ் எந்த சின்னம்? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 11, 2025
2026-க்கு பின் TTV அரசியலுக்கு முடிவு: ஆர்.பி.உதயகுமார்

அதிமுக ஒன்றிணைவது என்பது முடிந்துபோன ஒன்று; இனி அதற்கு சாத்தியமே இல்லை என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஜெ., இருந்தபோதே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு டிடிவி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். ஜெ., வகித்த பதவிக்கு ஆசைப்பட்டு துரோகம் செய்ததால், இந்த பிறவி அல்ல எந்த பிறவி எடுத்தாலும் அவர் தப்ப முடியாது. 2026 தேர்தலுக்கு பிறகு டிடிவியின் அரசியல் பயணம் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
News November 11, 2025
இலவச வீட்டு மனை.. அரசு புதிய அறிவிப்பு

சென்னை போன்ற மாநகராட்சிகளை சுற்றியுள்ள பெல்ட் ஏரியாக்களில் பட்டா வாங்குவது தொடர்பாக, அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முதலில் விண்ணப்பிக்கும் இடம் அரசின் புறம்போக்கு இடமாக இருக்க வேண்டும். தேவைப்படும் ஆவணங்கள்: ★பாஸ்போர்ட் அளவு போட்டோ ★ரேஷன் & ஆதார் கார்டு ★சாதி & வருமான சான்றிதழ் ★பட்டா பெற விரும்பும் இடத்தில் 10 ஆண்டுகள் வசித்ததற்கான ஆதாரம் போன்றவற்றை சமர்ப்பிப்பது அவசியம்.


