News April 23, 2025
தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.
Similar News
News November 24, 2025
Cyclone Alert… கனமழை வெளுத்து வாங்கும்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று(நவ.24) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 29-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. SHARE IT.
News November 24, 2025
இந்தியாவுடன் AI பார்ட்னர்ஷிப் அமைக்கும் ஜப்பான்

நேற்றைய ஜி20 மாநாட்டிற்கு மத்தியில் PM மோடி, ஜப்பான் PM டக்காய்ச்சி தானே உடன் சுமார் 35 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக செமிகண்டக்டர் மற்றும் AI உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News November 24, 2025
தென்காசியில் 2 பஸ்கள் விபத்து.. நடந்தது எப்படி?

தென்காசி இடைகால் அருகே 2 <<18373837>>தனியார் பஸ்கள்<<>> நேருக்குநேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இதில், 5 பேர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கின. திருமங்கலம் – கொல்லம் நெடுஞ்சாலையில் செல்லும் சில பஸ்கள், போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, அதிவேகமே இவ்விபத்துக்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


