News April 23, 2025
தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.
Similar News
News March 15, 2026
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் டாப் 5 ஜூஸ்கள்!

சர்க்கரை நோய் வந்துவிட்டால், ஜூஸ் பருகவே கூடாது என்ற சிந்தனை தான் பலருக்கும் வரும். ஆனால், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளவே சில ஜூஸ்களை பருகலாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த ஜூஸ்களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை தெரிந்து கொள்ளவும். சர்க்கரை பிரச்னையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதால், இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 15, 2026
அரசின் இலவசங்கள் வளர்ச்சி இல்லை வீழ்ச்சி: சீமான்

மக்களுக்கு அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதிகள் ஒரு ஏமாற்று வேலை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். மக்களை ஏமாற்றி கவர்ச்சியால் வாக்குகள் பறிக்கப்படுவதாகவும், பாதரச வெளிச்சத்தில் பௌர்ணமி வெளிச்சத்தை மக்கள் மறந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அரசின் இலவசங்களால் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை ஏறிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 15, 2026
சுந்தர் பிச்சை பொன்மொழிகள்

*உங்கள் கனவுகளை நம்பி, அவற்றை விரும்பி வாழுங்கள். அதுவே வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி. * உங்கள் திறன்களை தினமும் வளர்த்துக் கொள்ளுங்கள், தினந்தோறும் புதியது ஒன்றை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். *உண்மையான தலைவர்கள் என்பவர்கள் தங்கள் சொந்த வெற்றியை பற்றி மட்டுமல்ல, சுற்றியுள்ளவர்களின் வெற்றியைப் பற்றியும் சிந்திப்பார்கள். *ஆர்வத்தோடு கற்றுக்கொள்வது உங்கள் வெற்றிக்கு வழி காட்டும்.


