News April 23, 2025
தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.
Similar News
News November 16, 2025
200 ரன்கள் அடித்தாலும் அப்பாவுக்கு போதாது: வைபவ்

நேற்று நடந்த UAE-க்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் சதம் அடித்து <<18287956>>வைபவ் சூர்யவன்ஷி<<>> சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், 200 ரன்களை அடித்தாலும் எனது அப்பா திருப்தி அடையமாட்டார் என அவர் தெரிவித்துள்ளார். கூடுதலாக 10 ரன்களை அடித்திருக்கலாமே என்றுதான் அப்பா கேட்பார். ஆனால், நான் சதம் அடித்தாலும் சரி டக் அவுட் ஆனாலும் சரி, அம்மா எப்போதும் போல், மகிழ்ச்சியுடனே இருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
திமுகவினர் நல்ல டாக்டரை பார்க்கலாம்: அண்ணாமலை

பிஹாரில் நடந்தது தமிழகம், புதுச்சேரியிலும் நடக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். SIR-ல் என்ன தவறு இருக்கிறது என்பதை சொல்லிவிட்டு விஜய் எதிர்கட்டும். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு அரசியல் செய்தால், ராகுல் காந்திக்கு கிடைத்த பனிஷ்மெண்ட் விஜய்க்கும் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 200+ தொகுதிகளில் வெல்வோம் என கூறி வரும் திமுகவினர் நல்ல டாக்டரை பார்ப்பது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
International 360°: சீனா – ஜப்பான் இடையே பதற்றம் அதிகரிப்பு

*BBC மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக டிரம்ப் அறிவிப்பு. *ஆப்பிள் வாட்ச் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்கா ஆலோசனை. *‘Harry Potter’ நாவல் வெளிவர முதன்மை காரணமாக இருந்த பேரி கன்னிங்காம், பதிப்பு துறையில் இருந்து ஓய்வு பெற உள்ளார். *போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீனர்கள் ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல். *சூடானின் துணை ராணுவப்படையிடம் இருந்து 2 நகரங்களை ராணுவம் கைப்பற்றியது.


