News April 23, 2025

தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

image

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.

Similar News

News October 13, 2025

பணக்கார மாநிலங்கள்: TNக்கு எத்தனையாவது இடம்?

image

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது முன்னணியில் உள்ளன. டாப் 5 இடங்களில் தமிழகம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. அந்த 5 மாநிலங்கள் எவை எவை, தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது உள்ளிட்ட தகவல்கள் மேலே போட்டோஸாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக SWIPE செய்து பாருங்கள்.

News October 13, 2025

₹655 கோடியை வாரிக்குவித்த ‘காந்தாரா சாப்டர் 1’

image

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’ வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. 11 நாள்களில் மட்டும் ₹655 கோடியை படம் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ரஜினியின் கூலி(₹605 கோடி), விஜய்யின் லியோ(₹606 கோடி) ஆகிய படங்களில் ஒட்டு மொத்த வசூலை 11 நாள்களில் காந்தாரா தாண்டியுள்ளது. இதே வேகத்தில் சென்ற விரைவில் படக்குழு 1000 கோடியை தாண்டும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News October 13, 2025

திமுக மீதான சந்தேகத்திற்கு விடை கிடைக்கும்: நயினார்

image

கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க SC உத்தரவிட்டதற்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கரூர் விவகாரத்தில் திமுக அரசின் அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கும் எனவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!