News April 23, 2025

தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

image

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.

Similar News

News November 24, 2025

மழை வரப்போகுதா? இதை வைத்து கண்டுபிடிக்கலாம்

image

வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவது மழைக்கான அறிகுறியாக இருந்தாலும், சில நேரங்களில் காற்று மேகக் கூட்டத்தை கலைத்துவிடும். ஆனால், மழை வருவதை எளிதாக தெரிந்துகொள்ள சில உயிரினங்கள் நமக்கு பெரும் உதவியாக உள்ளன. அதன்படி, மழை வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 24, 2025

BREAKING: இந்தியா அபார வெற்றி

image

மகளிர் உலகக் கோப்பை கபடியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. டாக்காவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகள் மோதின. முதல் பாதியில் 20-16 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்தியா, 2-ம் பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்தது. இறுதியில் இந்தியா 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. சாதனை மகளிருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

News November 24, 2025

நிரந்தர டிஜிபி நியமனத்தில் தடுமாற்றம் ஏன்? EPS

image

டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அடுத்த டிஜிபியை தேர்வு செய்யாதது ஏன் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசே டிஜிபி பட்டியலை தயார் செய்ய வேண்டும் எனக்கூறிய அவர், வழக்கு தொடர்ந்த பிறகே பட்டியலை TN அரசு தயாரித்ததாக விமர்சித்துள்ளார். தேர்வு பட்டியலில் உள்ள 3 பேரும் அரசுக்கு கைப்பாவையாக செயல்படமாட்டார்கள் என்பதாலே இன்னும் டிஜிபி நியமிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!