News September 28, 2025
நெரிசலான சாலையை விஜய்க்கு ஒதுக்கியது ஏன்?

விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்ய விஜய் தரப்பு போலீசிடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால், அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், நெரிசலான மற்றும் அணுகுசாலை வசதியற்ற, வேலுச்சாமிபுரத்தை ஒதுக்கியதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒருவேளை ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்ய காவல்துறை இடம் ஒதுக்கி இருந்தால் இந்த துயரம் நடந்து இருக்காது என்றும் கூறுகின்றனர்.
Similar News
News January 11, 2026
உதயநிதி திமுகவின் வஜ்ர ஆயுதம்: துரைமுருகன்

கருணாநிதி, CM ஸ்டாலினை போல DCM உதயநிதியும், அயலக தமிழர் நலனுக்கு துணை நிற்பார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அயலக தமிழர் விழாவில் பேசிய அவர், CM ஸ்டாலினை சிறுவயது முதல் இப்போது வளர்ச்சி பெற்றது வரை பார்த்துள்ளதாக கூறிய அவர், உதயநிதியும் அவரது தனி பாணியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாக பாராட்டினார். உதயநிதி திமுகவுக்கு கிடைத்திருக்கிற ஒரு வஜ்ர ஆயுதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
News January 11, 2026
3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தற்போது தென்மாவட்டங்கள் & டெல்டா பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News January 11, 2026
ஜன நாயகன் விவகாரம் விஜய்க்கு பலமா?

முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும்போது எழும் சட்ட பிரச்னைகள், எதிர்ப்புகள் போன்றவை ஒரு விளம்பரம் தான் என்ற பொது கருத்து உண்டு. இந்நிலையில், ’ஜன நாயகன்’ படத்தை தடுக்க முயல்வது விஜய்க்கே மேலும் பலம் சேர்க்கும் என மல்லை சத்யா கூறியுள்ளார். எனவே, படத்தை வெளியிட மத்திய அரசு (CBFC) அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?


