News September 28, 2025
நெரிசலான சாலையை விஜய்க்கு ஒதுக்கியது ஏன்?

விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்ய விஜய் தரப்பு போலீசிடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால், அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், நெரிசலான மற்றும் அணுகுசாலை வசதியற்ற, வேலுச்சாமிபுரத்தை ஒதுக்கியதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒருவேளை ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்ய காவல்துறை இடம் ஒதுக்கி இருந்தால் இந்த துயரம் நடந்து இருக்காது என்றும் கூறுகின்றனர்.
Similar News
News September 28, 2025
TN அரசு, போலீஸ் கடமை தவறிவிட்டது: EPS

விஜய்யின் கரூர் பரப்புரையில் TN அரசும், போலீசும் கடமை தவறிவிட்டதாக EPS சாடியுள்ளார். விஜய் பேசி கொண்டிருந்த போது தொடர்ந்து ஆம்புலன்ஸ் சென்றது சந்தேகத்தை கிளப்புகிறது என்றும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். தவெக கூட்டம் அறிவிக்கப்பட்ட போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று EPS பேசினார்.
News September 28, 2025
BREAKING: கரூர் செல்கிறாரா விஜய்?

கரூர் துயரத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த மீண்டும் கரூருக்கு செல்வது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது. தற்போதுவரை தவெகவினர் யாரும் அஞ்சலி செலுத்தாதது சர்ச்சையான நிலையில், கரூர் செல்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
News September 28, 2025
விசாரணை ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை: நயினார்

கரூர் சம்பவத்தில் தமிழக அரசு அமைத்திருக்கும் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்க கூடாது என்றும் இந்த பிரச்னையை சுப்ரீம் கோர்ட் இன்றே விசாரிக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார். முன்னதாக, அவர் விஜய்யின் கரூர் பரப்புரையில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.