News October 1, 2025
செந்தில் பாலாஜி பதறுவது ஏன்? அதிமுக

கரூர் துயரத்தில் செந்தில் பாலாஜி பதறுவதாக அதிமுக விமர்சித்துள்ளது. கரூர் சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்த பிறகு சட்ட ஒழுங்கு ADGP, டிஜிபி, வருவாய் செயலர் பிரஸ் மீட் நடத்திய நிலையில், பதறிக்கொண்டு செந்தில் பாலாஜி பிரஸ் மீட் நடத்துவதாக அதிமுக சாடியுள்ளது. பல விஷயங்களுக்கு மவுனம் காத்த அவர், இவ்வழக்கில் மடைமாற்ற அரசியலுக்காக வாய் திறக்கிறாரா என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
Similar News
News October 1, 2025
டெல்லி சென்றார் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தனது வழக்கறிஞர்கள் குழுவோடு அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் தேசிய விளையாட்டு போட்டிகள் காரணமாக டெல்லி சென்றதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய ட்வீட் தொடர்பாக அவர் கைதாவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டெல்லி சென்றுள்ளார்.
News October 1, 2025
நிலவை பற்றிய தமிழ் பாடல்கள்

அமைதியான இரவு நேரத்தில் முழு நிலவை ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? பொதுமக்களாகிய நாமே அப்படி ரசித்தால், கவிஞர்கள் சும்மா விடுவார்களா என்ன! தமிழ் சினிமா தொடங்கியதில் இருந்து இன்று வரை, நிலவை பற்றி ஆயிரக்கணக்கான பாடல்கள் வெளியாகியுள்ளன. அதில் சிலவற்றை மேல் உள்ள புகைப்படங்களில் காணலாம். உங்களுக்கு பிடித்த நிலவுப் பாடல் என்னவென்று கமெண்ட் செய்யுங்கள்.
News October 1, 2025
செல்போன் ரீசார்ஜ் 3 மாதம் இலவசம்!.. ALERT

இந்தியர்கள் அனைவருக்கும் 3 மாதங்களுக்கு இலவச செல்போன் ரீசார்ஜ் திட்டத்தை PM மோடி தொடங்கி வைத்துள்ளதாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம்(PIB Factcheck), இது மோசடி எனத் தெரிவித்துள்ளது. அவ்வாறு வரும் மெசேஜ் லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உஷார் மக்களே!