News October 1, 2025
செந்தில் பாலாஜி பதறுவது ஏன்? அதிமுக

கரூர் துயரத்தில் செந்தில் பாலாஜி பதறுவதாக அதிமுக விமர்சித்துள்ளது. கரூர் சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்த பிறகு சட்ட ஒழுங்கு ADGP, டிஜிபி, வருவாய் செயலர் பிரஸ் மீட் நடத்திய நிலையில், பதறிக்கொண்டு செந்தில் பாலாஜி பிரஸ் மீட் நடத்துவதாக அதிமுக சாடியுள்ளது. பல விஷயங்களுக்கு மவுனம் காத்த அவர், இவ்வழக்கில் மடைமாற்ற அரசியலுக்காக வாய் திறக்கிறாரா என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
Similar News
News March 12, 2026
இந்த எண்களை ATM PIN நம்பராக வெக்காதீங்க.. உஷார்!

பொதுவாக பலரும் ATM PIN நம்பர்களாக நமது DOB அல்லது நெருக்கமானவர்களின் DOB-யை தான் வைத்திருப்போம். இல்லையென்றால் 1234 அல்லது 1111 போன்றவற்றை வைத்திருப்போம். இந்த மாதிரியான PIN நம்பர்கள் வைத்திருப்பது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கார்டுகள் தொலையும் போது, இது போன்ற நம்பர்களை கண்டறிவது மிகவும் ஈசியாம். எப்போதும் சீரற்ற, யூகிக்க முடியாத எண்களையே PIN நம்பராக வைக்கவேண்டுமாம். SHARE IT.
News March 12, 2026
பாலியல் குற்றம் குறைந்துள்ளது: தமிழக காவல்துறை

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டி <<19364920>>எதிர்க்கட்சிகள்<<>> போராட்டங்களை அறிவித்துள்ளன. இதனிடையே, 5 ஆண்டுகளில் பாலியல் குற்றங்கள் குறைந்திருப்பதாக உள்துறை செயலர் தீரஜ் குமார், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர். 2021-ல் 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவான நிலையில், 2025-ல் 401 வழக்குகளாக குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி உங்க கருத்து?
News March 12, 2026
நடிகர் ஹரி முரளி தற்கொலை.. சோகமான தகவல்

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட <<19362357>>இளம் நடிகர் ஹரி முரளி(27)<<>>, தற்கொலை செய்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அன்னூர் இல்லத்தில் தூக்கில் தொங்கியபடி அவரது சடலம் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது விபரீத முடிவுக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த ஹரி முரளி இளம் வயதிலேயே தற்கொலை முடிவை எடுத்திருப்பது பெரும் சோகம்.


