News April 8, 2024

சென்னை அதி வெப்பமாக இருப்பது ஏன்?

image

ஈரோட்டில் நேற்றைய வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ். சென்னையில் 39 டிகிரி மட்டுமே. ஆனால், ஈரோட்டை விட சென்னையில் இருப்போர் அதிக வெப்பத்தை உணர்கின்றனர். இதற்கு ஈரப்பதம்தான் காரணம். சென்னையில் எப்போதுமே ஈரப்பதம் அதிகம். உடல் வியர்வையை ஆவியாக விடாமல் இந்த ஈரப்பதம் தடுப்பதால் சென்னை மக்கள் அதீத வெப்பத்தை உணர்கின்றனர். எனவே, வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் சேர்த்தே எப்போதும் கணக்கிட வேண்டும்.

Similar News

News August 11, 2025

அணு ஆயுத போருக்கே அஞ்ச மாட்டோம்.. PAK-க்கு IND பதிலடி

image

அணு ஆயுத போருக்கே அஞ்சாத தங்களுக்கு அண்டை நாட்டில் இருந்து மிரட்டல் விடுக்க வேண்டாம் என பாக்.,க்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு 2-வது முறையாக USA சென்றுள்ள பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீர், காஷ்மீர் பாகிஸ்தானின் நாடி நரம்பு எனவும், சிந்து நதிக்கு இடையே IND அணை கட்டினால் தகர்ப்போம் என்றும் பேசினார். USA உதவியுடன் நீங்கள் ஆட வேண்டாம் எனவும் இந்தியா வார்னிங் கொடுத்துள்ளது.

News August 11, 2025

மழைக்காலத்தில் காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள்

image

☛நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடியுங்கள். ☛ஓட்டல் உணவுகளை தவிருங்கள். ☛குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உட்கொள்வதை தவிருங்கள். ☛சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் சளி பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். ☛தெருவில் விற்கும் உணவுகள், நீண்ட நாள் ஆன திண்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. ☛நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதோடை இலை போன்றவற்றில் கஷாயங்களை எடுப்பது நல்லது. SHARE IT.

News August 11, 2025

இனி படிப்பது ரொம்ப ஈசி.. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

image

மாணவர்கள், ஆசிரியர்களுக்காக புதிய சமுதாய வானொலி நிலையத்தை CBSE தொடங்கவுள்ளது. ஏற்கனவே ‘ஷிக்‌ஷா வாணி’ பாட்காஸ்ட் மூலம் பாடங்கள் ஆடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், NCERT பாடத்திட்டத்தின்படி, பாடங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. புதிய வானொலி நிலையம் தொடங்கப்பட்டதும், மாணவர்களின் கற்றலை மேலும் எளிதாக்கும் வகையில் பாடங்கள் ஒளிபரப்பாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களே ரெடியா..!

error: Content is protected !!