News April 8, 2024
சென்னை அதி வெப்பமாக இருப்பது ஏன்?

ஈரோட்டில் நேற்றைய வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ். சென்னையில் 39 டிகிரி மட்டுமே. ஆனால், ஈரோட்டை விட சென்னையில் இருப்போர் அதிக வெப்பத்தை உணர்கின்றனர். இதற்கு ஈரப்பதம்தான் காரணம். சென்னையில் எப்போதுமே ஈரப்பதம் அதிகம். உடல் வியர்வையை ஆவியாக விடாமல் இந்த ஈரப்பதம் தடுப்பதால் சென்னை மக்கள் அதீத வெப்பத்தை உணர்கின்றனர். எனவே, வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் சேர்த்தே எப்போதும் கணக்கிட வேண்டும்.
Similar News
News March 20, 2026
BREAKING: பெட்ரோல் விலை உயர்ந்தது.. புதிய அறிவிப்பு

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் எதிரொலியாக பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ₹2.09 முதல் ₹2.35 வரை உயர்த்துவதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேநேரத்தில், சாதாரண பெட்ரோலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
News March 20, 2026
அதிமுகவா? அமித்ஷா திமுகவா? KN நேரு

’டெல்லிக்கு EPS ஓடுவதற்கு பெயர்தான் அதிமுக கூட்டணிக்கு தலைமை தாங்குவதா?’ என KN நேரு விமர்சித்துள்ளார். ED-யின் சம்மன் பெற்றவர் போல டெல்லிக்கு சென்று, தொகுதி பங்கீட்டுக்காக 2 மணிநேரம் காத்திருந்து அமித்ஷாவை EPS சந்தித்திருக்கிறார் என சாடியுள்ளார். கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறாததை குறிப்பிட்டு, அதிமுகவா, அமித்ஷா திமுகவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 20, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு

கேஸ் சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் பதுக்கலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழாய் வழி கேஸ் (PNG) இணைப்புகளை விரிவுபடுத்துவதில் ஒத்துழைப்பு அளிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி சீராக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


