News September 30, 2025

3 நாள்கள் தூங்கியது ஏன்? விஜய்க்கு சிபிஐ கட்சி கேள்வி

image

விஜய் வீடியோவில் பேசியுள்ள விஷயத்துக்கு சிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் துயரம் நடந்தவுடன் விஜய் சென்னைக்கு ஓடியது ஏன் என்றும், 3 நாள்களாக தூங்கியது ஏன் எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தாமதமாக சென்றது ஏன் எனவும், பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்கவேண்டும் என அக்கட்சியின் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 30, 2025

மோடி லடாக்கிற்கு துரோகம் செய்கிறார் – ராகுல் காந்தி

image

கார்கிலில் ராணுவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, பிரதமர் மோடி லடாக்கிற்கு செய்யும் துரோகம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மாநில அந்தஸ்து கோரி போராடும் லடாக் மக்களுடன், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூடு குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

News September 30, 2025

Women’s WC: இந்தியா 269 ரன்கள் சேர்ப்பு

image

மகளிர் உலக கோப்பையில், இலங்கைக்கு இந்தியா 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இனோகா ரனவீராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 125 ரன்னுக்குள் 6 விக்கெட்களை இழந்த நிலையில், தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கவுர் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் ஸ்நே ரானா அதிரடி காட்ட இந்தியா 47 ஓவர்களில் 269 ரன்கள் ஸ்கோர் செய்தது. முன்னதாக மழை குறுக்கீட்டால் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டன.

News September 30, 2025

டிகிரி முடித்தால் ₹35,400 சம்பளம்!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இன்றுமுதல், வரும் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

error: Content is protected !!