News September 15, 2024
ஓணத்தில் ஏன் அத்தப்பூ கோலம் இடப்படுகிறது

ஓணம் பண்டிகையின் போது தங்கள் வீடு தேடி வரும் மகாபலி அரசனை வரவேற்க அத்தப்பூ கோலம் இடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்தப்பூ என்ற பூவைப் பறித்து பூக்கோலத்தில் முதலில் வைத்தே கோலத்தை தொடங்குவர். முதல் நாள் ஒரு வகை, 2ஆம் நாள் 2, 3ஆம் நாள் 3 என 10ஆம் நாள் 10 வகையான பூக்களால் கோலத்தை அழகுபடுத்துவார்கள். அத்தப்பூ இடுவதற்காக தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களை அதிகம் பயன்படுத்துவர்.
Similar News
News July 9, 2025
1.10 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு காத்திருப்பு!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை சேர்க்கும் பணி துவங்கி புதிய ரேஷன் கார்டை அரசு விரைவாக வழங்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியிலிருந்து மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், பல முறை ஆய்வு செய்த பிறகே வழங்கப்படுவதால், ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார் 1.10 லட்சம் பேர் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மக்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா?
News July 9, 2025
பிற்பகல் 12 மணி வரை… முக்கிய செய்திகள்!

➤நாடு தழுவிய <<17000804>>ஸ்ட்ரைக்<<>>.. தமிழகத்தில் 80% அரசு பஸ் இயக்கம்
➤ <<17003074>>நமீபியாவில் <<>>சுற்றுப்பயணம்: மேள தாளம் வாசித்த PM மோடி
➤<<17001915>>குஜராத்தில் <<>>உடைந்து விழுந்த பாலம்… 6 பேர் மரணம்
➤<<17001872>>தங்கம் <<>>விலை சவரனுக்கு ₹480 குறைந்தது
➤<<17000262>>ஊக்கமருந்து <<>>பயன்பாடு: Ex. உலகசாம்பியனுக்கு ஒரு வருடம் தடை ➤<<17001168>>சட்டவிரோத <<>>பணப்பரிமாற்றம்.. நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு
News July 9, 2025
ராஜூவுடன் ஜாலியாக ஊர் சுற்றும் சமந்தா!

சில காலமாகவே சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் பழகி வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்க சென்ற சமந்தா, நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட போட்டோக்களில் ராஜை இறுக்கமாக பிடித்தபடி, சமந்தா இருக்கும் போட்டோ தான் நெட்டிசன்களின் கவனத்தை அதிகளவு ஈர்த்துள்ளது. ஒருவேளை வெளிவரும் செய்திகளில் உண்மை இருக்குமோ என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.