News August 17, 2025

5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்?

image

2019-ல் இந்தியாவில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ₹35,000-ஆக இருந்தது. தற்போது அதன் விலை ₹1 லட்சத்தை கடந்துவிட்டது. 2019-2025 காலக்கட்டத்தில் தங்கத்தின் விலை 200% உயர்வை கண்டிருக்கிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால் 2030-ல் தற்போதிருக்கும் விலையை விட தங்கத்தின் விலை 2 மடங்காக உயருமாம். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தில் விலை ₹2 லட்சத்தை கடக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

Similar News

News March 5, 2026

விஜய்யின் திமுக எதிர்ப்பை பாராட்டுகிறேன்: தமிழிசை

image

திமுகவை விரட்ட வேண்டும் என்பது மட்டுமே தங்களின் குறிக்கோள் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். திமுகவின் தவறுகளையும், நீட் விலக்கு, கேஸ் மானியம் உள்ளிட்ட திமுகவின் பொய் வாக்குறுதிகளை விஜய் தெளிவாக எடுத்துச் சொல்வதாகவும், அவரது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை தான் பாராட்டுவதாகவும், மற்றபடி திமுக – அதிமுக டீலிங் என்று விஜய் விளையாட்டாக பேசி வருவதாக குறிப்பிட்டார்.

News March 5, 2026

நகைக் கடன்.. முக்கிய அப்டேட்

image

நகைக் கடன் பெற முயற்சிப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி. குறைந்த வட்டியில் கடன் பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (8.05 – 8.55%), இந்தியன் ஓவர்சீஸ் (8.20%), PNB (8.35 – 9.25%), SBI (8.70 – 9%), கனரா (8.75 – 9.25%) ஆகியவே குறைந்த வட்டி விகிதத்தில் நகைக் கடன் வழங்கி வருகின்றன. இதில், ஏதேனும் ஒன்று தேர்வு செய்து கடன் பெற்றால் வட்டி சுமை குறையும். SHARE

News March 5, 2026

கமேனி கொலை: இந்தியா மௌனம் கலைத்தது

image

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மறைவுக்கு இந்தியா பல நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்துள்ளது. முன்னதாக, கமேனி கொல்லப்பட்டதை உலக நாடுகள் வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், மௌனம் கலைத்த இந்தியா, இந்த இக்கட்டான நேரத்தில் ஈரான் மக்களுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ளது.

error: Content is protected !!