News October 20, 2025

பட்டாசு தீக்காயம் பட்டால் என்ன செய்ய வேண்டும்?

image

✦சிறிய அளவிலான தீக்காயத்திற்கு தண்ணீரில் 10- 15 நிமிடங்கள் குளிர வைக்கவும். ஐஸ் வாட்டரை பயன்படுத்த வேண்டாம் ✦தீக்காயம் மீது டூத் பேஸ்ட், எண்ணெய், நெய் வைக்கக் கூடாது ✦சுத்தமான காட்டன் துணியை பாதிக்கப்பட்ட பகுதி மீது கட்டவும் ✦கண்களில் எரிச்சல் & அலர்ஜி ஏற்பட்டால், சுத்தமான நீரில் கண்களை கழுவவும் ✦துணியில் நெருப்பு பிடித்தால், தரையில் படுத்து உருளுவதன் மூலம் நெருப்பு விரைவாக அணையும். SHARE IT.

Similar News

News October 20, 2025

பட்டாசு வெடிக்கும்போது கண்கள் பத்திரம்!

image

பட்டாசு புகையால் நுரையீரலுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் பாதிப்புகள் வரலாம். சாதாரண கண் எரிச்சலில் தொடங்கி, மாலைக்கண், கண்புரை ஏற்பட வாய்ப்புள்ளதுனு டாக்டர்கள் சொல்றாங்க. எனவே, ➤பட்டாசு வெடிக்கும்போது கண்ணாடி அணியுங்கள் ➤எரிச்சல் ஏற்பட்டால் உடனே தண்ணீரில் கழுவுங்கள் ➤பட்டாசு வெடித்த கையை கண்ணில் வைக்க வேண்டாம் ➤பட்டாசு வெடிக்கும் குஷியில் ரொம்ப நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்காதீங்க. SHARE.

News October 20, 2025

இவ்வளவு பெரிய பூசணிக்காயா!

image

பூசணிக்காய் வளர்ப்பது என்பது சாதாரண வேலை அல்ல. அதிலும் பிரம்மாண்ட பூசணிக்காய்களை வளர்ப்பது பெரிய விஷயம். அப்படி வளர்க்கப்படும் பூசணிக்காய்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில், பிராண்டன் டாசன் என்ற பொறியாளர் வளர்த்த 1,064 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதல் பரிசை தட்டி சென்றது. அவருக்கு சுமார் ₹17 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

News October 20, 2025

நடிகர் பாலமுருகன் காலமானார்.. குவியும் இரங்கல்

image

இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட சி.பாலமுருகன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக உடுமலைப்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 2007-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘முதல் கனவே’ படத்தில் விக்ராந்த், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘குண்டக்க மண்டக்க’ படத்திற்கு வசனம் எழுதியதோடு நடித்தும் உள்ளார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!