News May 2, 2024
செந்தில் பாலாஜியின் தம்பி என்ன ஆனார்?

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு மத்தியில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் 10 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாகவுள்ளார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனிடையே, கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் வசிக்கும் தனது பெற்றோரை அவர் சமீபத்தில் சந்தித்ததாகத் தெரிய வந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 16, 2025
ரஜினி வீட்டில் காலையிலேயே பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் K.S.ரவிக்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுபாட்டு அறைக்கு பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, இருவரின் வீடுகளிலும் சோதனை செய்ய தேனாம்பேட்டை போலீசார் விரைந்தனர். ஆனால், <<18274391>>ரஜினி <<>>தரப்பில் சோதனை வேண்டாம் என மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் K.S.ரவிக்குமார் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
News November 16, 2025
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்: மோகன் பகவத்

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறுகிறார்கள் என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பெரும் பகுதியினர் இன்னும் பின் தங்கியே உள்ளனர். உலக மக்கள் தொகுதியில் வெறும் 4% பேர், 80% உலக வளங்களை பயன்படுத்துகின்றனர். வளங்கள் யாரிடமிருந்து எடுக்கப்படுகிறதோ, அவர்கள் முன்னேற்றத்தின் பலனை பெறுவதில்லை என கூறியுள்ளார்.
News November 16, 2025
காயம்பட்ட கில் குறித்து பிசிசிஐ கொடுத்த அப்டேட்

தென்னாப்பிரிக்க உடனான டெஸ்ட் மேட்சில் இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சையில் இருப்பதால் எஞ்சிய நாள் ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


