News April 19, 2024
2019 தேர்தலை முந்தும் வாக்கு சதவீதம்

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5-6 வரை கடைசி ஒரு மணி நேரத்தில் 10% வரை வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக மாலை வேளையில் ஆர்வத்துடன் சென்ற மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019 தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவானது.
Similar News
News January 18, 2026
FLASH: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

திமுக, வேளச்சேரி மேற்கு பகுதிச் செயலாளர் அரிமா சேகர், EPS முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். அவருடன் திமுக பிரமுகர் காரத்தே M.P.சுதர்சன், வேளச்சேரி பகுதி இலக்கிய அணிச் செயலாளர் சேகர், வேளச்சேரி பகுதி துணை அமைப்பாளர் விநாயகம் ஆகியோரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நெருங்குவதால் மாற்றுக் கட்சியினரை இழுக்கும் பணியில் திமுக, அதிமுக போட்டி போட்டு செய்து வருகின்றன.
News January 18, 2026
‘கைதி 2’ தற்போதைய நிலைமை என்ன? கார்த்தி ரியாக்ஷன்!

கடந்த டிசம்பரில் ‘கைதி 2’ தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘கூலி’ பட விமர்சனங்களை தொடர்ந்து, படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. தற்போது அல்லு அர்ஜுன் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘கைதி 2’ படம் பற்றிய கேள்விக்கு, ‘இதைப்பற்றி லோகேஷ் சொல்வார்’ என கார்த்தி பதிலளித்துள்ளார். இதனால் லோகேஷ் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ‘கைதி’ ரசிகர்கள்.
News January 18, 2026
ஓசூர் ஏர்போர்ட் திட்டத்தை நிராகரித்தது மத்திய அரசு

ஓசூரில் ஏர்போர்ட் கட்டுவதற்கான TN அரசின் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்(HAL) நிறுவனத்தின் பயிற்சிக்காக பாதுகாப்புத்துறை அனுமதி தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சூளகிரி அருகே பேரிகை மற்றும் பாகலூர் இடையே 2,300 ஏக்கர் பரப்பளவில் புதிய ஏர்போர்ட் அமைக்க அறிக்கை தயார் செய்யும் பணியில் அரசு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


