News March 18, 2024

விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News July 11, 2025

சிவகாசி: ரகசிய ஆய்வில் பட்டாசு தயாரித்த 9 பேர் கைது

image

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து அனுப்புவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் ரகசிய ஆய்வு செய்தனர். அதில் விஸ்வநத்தம் பகுதியில் 3 பேர், மீனம்பட்டியில் 4 பேரை கைது செய்தனர். இதேபோல் தங்கள் வீட்டின் அருகே தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்த மீனம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் பட்டாசு தயாரித்ததாக ஒரே நாளில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News July 10, 2025

சிவகாசி: குடும்பமே விபத்தில் சிக்கிய கொடூரம்

image

சிவகாசி அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாதவநாதன் (39). இவர் தனது மனைவி ஷோபனா (32), மகள் நித்யாஸ்ரீ(2) ஆகியோருடன் பைக்கில் வந்துள்ளார். மயிலாடுதுறை பேருந்து நிறுத்தம் அருகே பாண்டீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மாதவநாதன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் மாதவநாதன், ஷோபனா, நித்யாஸ்ரீ ஆகியோர் காயமடைந்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை.

News July 10, 2025

விருதுநகரில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். இ-ஸ்கூட்டர் வாங்க உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!