News March 18, 2024
விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News January 19, 2026
விருதுநகர்: வீடு கட்ட ரூ.2.50 வரை மானியம்

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் அருகே உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம். இதனை ஷேர் பண்ணுங்க!
News January 19, 2026
சிவகாசி: அரிவாளால் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மம்சாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த முருகானந்தம் பேருந்தை மறித்து ஓட்டுநர் பார்த்திபனிடம் தகராறு செய்ததுடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அரசு பேருந்தின் கண்ணாடியை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் ஓட்டுநர் அளித்த புகாரில் முருகானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
News January 19, 2026
விருதுநகரில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

விருதுநகர், நரிக்குடி அருகே குறையறைவாசித்தான் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் சிறுநீரக பாதிப்பால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது நிலையை எண்ணி விரக்தி அடைந்து சில நாட்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை.


