News March 18, 2024

விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News November 23, 2025

விருதுநகரில் லைன்மேன் உதவி வேண்டுமா..!

image

விருதுநகர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 23, 2025

விருதுநகர்: ஆசிரியர் அடித்ததில்.. மாணவருக்கு ஆபரேஷன்

image

விருதுநகரில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10th படிக்கும் மாணவரை, வகுப்பறையில் நவ., 17ல் சமூக அறிவியல் ஆசிரியர் குமார் பிரம்பால் அடித்தார். அப்போது, அருகே அமர்ந்திருந்த மாணவரின் இடது கண்ணில் பிரம்படி பலமாக விழுந்ததால், கருவிழியில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. மதுரை தனியார் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News November 23, 2025

விருதுநகர்: உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!