News March 18, 2024
விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News December 30, 2025
விருதுநகர் அருகே சம்பவ இடத்திலே தம்பதியினர் பலி

சம்பகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிழவ மூர்த்தி, ஜோதியும் தம்பதியினர். எக்ஸெல் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று கமுதிக்கு வந்தபோது காவடிபட்டி என்ற இடத்தில் சாலையோரமாக பழுதாகி நின்ற டிப்பர் லாரி மீது கிழவ மூர்த்தி ஓட்டிச் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
News December 30, 2025
விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
News December 30, 2025
ஸ்ரீவி ஆண்டாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த சனிக்கிழமை பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. இதில்,தினசரி காலை ஆண்டாள் ரங்கமன்னர்,பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் காட்சியளித்தனர். இராப்பத்து உற்சவம் இன்று ஆரம்பமாக உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5:20 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.


