News March 18, 2024
விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 23, 2025
ஸ்ரீவி. நகராட்சி அலுவலகத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல்

ஸ்ரீவில்லிபுத்துார் அசோக் நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் 38. இவரது தாயார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பணியாற்றி இறந்து போன நிலையில் அவரது பண பலன்களை பெற்றுத் தருமாறு கூறி நேற்று முன்தினம் காலை நகராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிவகாமியை அசிங்கமாக பேசி பிளாஸ்டிக் சேரால் தாக்கியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
News November 23, 2025
விருதுநகர்: இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்..!

ஸ்ரீவி – சிவகாசி ரோட்டில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜ் (21), வடபட்டியை சேர்ந்த தினேஷ்குமார் (21) ஆகியோர் மீது மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரீல்ஸில், காளிராஜ், தினேஷ் ஆகிய இருவர் சாலையோரத்தில் சண்டையிடுவது போன்று ரீல்ஸ் எடுத்தனர். அப்போது டூவிலரில் வந்த ஒருவர் இவர்கள் சண்டையிடுவதை பார்த்து முன்னாள் சென்ற பேருந்தில் மோதி விபத்தில் சிக்கினார்.
News November 23, 2025
விருதுநகரில் லைன்மேன் உதவி வேண்டுமா..!

விருதுநகர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


