News March 18, 2024
விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News December 21, 2025
ராஜபாளையம்: கல்லை தூக்கிப்போட்டு கொன்ற நண்பன் கைது

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சமுசிகாபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(37), கூலித் தொழிலாளி. நண்பர் பாலமுருகன்(23), இருவரும் ஊரணி அருகே மது அருந்தினர். இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. பாலமுருகன் ஆத்திரத்தில் வேல்முருகனை கீழே தள்ளி கல்லை எடுத்து தலையில் போட்டதில் அவர் உயிரிழந்தார். கீழராஜகுலராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்துள்ளனர்.
News December 21, 2025
ராஜபாளையம்: கல்லை தூக்கிப்போட்டு கொன்ற நண்பன் கைது

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சமுசிகாபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(37), கூலித் தொழிலாளி. நண்பர் பாலமுருகன்(23), இருவரும் ஊரணி அருகே மது அருந்தினர். இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. பாலமுருகன் ஆத்திரத்தில் வேல்முருகனை கீழே தள்ளி கல்லை எடுத்து தலையில் போட்டதில் அவர் உயிரிழந்தார். கீழராஜகுலராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்துள்ளனர்.
News December 21, 2025
விருதுநகர்: ஒரே சம்பவத்தில் மூன்று பேர் பலி.!

விருதுநகர், ஆமத்துார் பகுதியை சேர்ந்தவர் செல்லச்சாமி 57. இவர் தோட்ட காவலாளியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் காலை அதே பகுதியை சேர்ந்த படுகளம் 58, ஆடுகளுக்கு இலை பறிக்க தோட்டத்திற்குள் சென்றபோது தகராறு ஏற்பட்டதில் படுகளம், செல்லச்சாமியை வெட்டிக் கொலை செய்து விட்டு, போலீசுக்கு பயந்து துாக்கிட்டு தற்கொலை செய்தார். துக்கத்தில் இருந்த செல்லச்சாமி மனைவி நேற்று மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்.


