News September 30, 2025

BREAKING: விஜய் வீடு திரும்பினார்

image

கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அன்று இரவே சென்னை திரும்பினார் விஜய். கிட்டத்தட்ட 36 மணி நேரத்துக்கு பிறகு, இன்று காலை 11 மணியளவில் நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் வீட்டுக்கு விஜய் சென்றார். அங்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் அங்கிருந்து நீலாங்கரை வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

Similar News

News September 30, 2025

கரூர் துயரத்தில் 4 பக்கமும் தவறு: ப.சிதம்பரம்

image

கரூர் துயர சம்பவத்தில் 4 பக்கமும் தவறு இருப்பதாக தோன்றுகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தோன்றிய ஒரு யோசனையை தலைமை செயலாளரிடம் கூறியதாகவும், இதுபோன்று பலர் தெரிவித்த யோசனைகளை பரிசீலித்து எடுக்கப்படும் முடிவுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 30, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 474 ▶குறள்: அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். ▶பொருள்: பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

News September 30, 2025

கரூருக்கு வர PM விரும்பினார்: நிர்மலா சீதாராமன்

image

பிரதமர் கரூருக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விரும்பியதாக கூறிய நிர்மலா சீதாராமன், அவர் வர முடியாத காரணத்தால் தான் வந்ததாக தெரிவித்துள்ளார். விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சையில் இருந்தோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றார்.

error: Content is protected !!