News September 30, 2025
கரூருக்கு வர PM விரும்பினார்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் கரூருக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விரும்பியதாக கூறிய நிர்மலா சீதாராமன், அவர் வர முடியாத காரணத்தால் தான் வந்ததாக தெரிவித்துள்ளார். விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சையில் இருந்தோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றார்.
Similar News
News November 14, 2025
சிறுவயதிலேயே குழந்தைகள் சந்திக்கும் பிரச்னை; ALERT!

பீட்சா, பர்கர், சாக்லேட் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை அதிகரித்துள்ளது. இதனால் நாளடைவில் நீரிழிவு, High BP, இதயநோய் மற்றும் மனநல பிரச்னைகள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனை தவிர்க்க, காய்கறி, பழம், மீன் போன்ற ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது, உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றை அவர்கள் பின்பற்ற வேண்டும். குழந்தைகளை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 14, 2025
பற்களின் கறையை நீக்கும் தேங்காய் எண்ணெய்

நாம் தினமும் பற்களை துலக்கினாலும் உட்புறத்தில் மஞ்சள் கறை படிந்து இருக்கும். அதை எளிதாக நீக்க, வீட்டில் இருக்கும் சமையல் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் போதும். ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 2 ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அதை பிரஸ் மூலம் பற்களில் நன்றாக தேய்த்தால் கறை நீங்கிவிடும்.
News November 14, 2025
கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தாய்க்கு பிடிவாரண்ட்

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய மாவட்ட கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கிருஷ்ணகுமாரி, கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே சுர்ஜித், அவரது தந்தை மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் சிறையில் உள்ளனர்.


