News April 22, 2025

டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

image

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 16, 2025

150 kmph வேகத்தில் சீறிய ரயில்.. புதிய உச்சம்

image

ரயிலின் வேகத்தில் இந்திய ரயில்வே புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தன்பாத் மண்டலத்தில் ரயிலை 150 kmph வேகத்தில் செலுத்தி, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் போது, டம்ளரில் இருந்த நீர் சிந்தாமல், சுமூகமான பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத், ராஜதானி மற்றும் சதாப்தி உள்ளிட்ட முக்கிய ரயில்களின் அதிகபட்ச வேகம் 130 kmph ஆக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 15, 2025

இப்படித்தான் மது குடிக்க பழகினேன்: ஊர்வசி

image

முதல் கணவர் வீட்டுக்கு சென்ற பின் தான், குடிக்க பழகியதாக ஊர்வசி தெரிவித்துள்ளார். கணவர் வீட்டில் அனைவரும் மாடர்னாக இருந்தனர். குழந்தைகள், பெற்றோருடன் அமர்ந்து குடிப்பது வழக்கமாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் நானும் மது குடிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் குடிக்கு அடிமையாகி, அதில் இருந்து வெளியேற மிகவும் கஷ்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நடிகர் மனோஜ் கே ஜெயனை ஊர்வசி முதலில் திருமணம் செய்திருந்தார்.

News December 15, 2025

இனி தனியாரும் அணுமின் நிலையங்களை நடத்தலாம்!

image

அணுமின் உற்பத்தி துறையை தனியாருக்கு திறந்துவிடும் SHANTI மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், சிறிய அளவிலான அணுமின் நிலையங்களை நிறுவ தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல், அரசின் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்தும் தனியார் நிறுவனங்கள் செயல்படலாம். நாட்டில் அமைக்கப்பட உள்ள தரவு மையங்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!