News April 22, 2025
டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 1, 2026
ஆபரேஷன் சிந்தூர்.. இந்தியா பெருமிதம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த சான்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், இந்திய படைகள் திறம்பட செயல்பட்டு PAK-ன் தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்ற செய்தியை உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் சொல்லியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News January 1, 2026
புத்தாண்டு ஸ்பெஷல் கோலங்கள்!

வருடத்தின் முதல் நாளான இன்று வீட்டுவாசலில் கோலமிடுவது சிறப்புக்குரிய விஷயமாகும். புத்தாண்டை வரவேற்று கோலமிடுவதால் ஆண்டு முழுவதுமே வீட்டில் மகிழ்ச்சி ததும்பும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், வீட்டுவாசலில் போடக்கூடிய சில வண்ணமயமான புத்தாண்டு கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை Swipe செய்து பார்த்து வீட்டில் தவறாமல் முயற்சிக்கவும்.
News January 1, 2026
மகளிருக்கு மாதம் ₹2,500.. அதிமுக பிளான்

தேர்தல் வாக்குறுதி குறித்து அதிமுக தலைமைக்கு பாஜக பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மகளிருக்கு மாதம் ₹2,500, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட பாஜக அறிவுறுத்தி இருக்கிறதாம். நிதி ஆதாரம் பற்றி கவலை வேண்டாம் என்றும், வாக்குறுதிகளுக்கு PM மோடி கேரண்டி தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், வரும் தேர்தலின் கதாநாயகனாக தங்களது தேர்தல் அறிக்கை இருக்கும் என ADMK நம்புகிறதாம்.


