News April 22, 2025
டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 1, 2026
டாக்டர் ஆலோசனையின்றி இனி COUGH SYRUP வாங்க கூடாது!

ம.பி., மற்றும் ராஜஸ்தானில் கோல்ட்ரிஃப் Syrup பாதிப்பால் குழந்தை இறந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து WHO விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, Syrup தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான விதிகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. அதனால், டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே இனிமேல் Syrup-ஐ மெடிக்கலில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News January 1, 2026
பொங்கல் கொண்டாடும் அமித்ஷா: கரு.நாகராஜன்

பொங்கலுக்கு பின் பாஜகவின் செயல்பாடுகள் வேகமெடுக்கும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். ஜன.4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா, நயினார் பரப்புரை நிறைவு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும், அதனைத் தொடர்ந்து ஜன.5-ம் தேதி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார் எனத் தெரிவித்தார்.
News January 1, 2026
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ₹11 பைசா குறைந்து, ₹89.99 என வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீட்டுச் சந்தையிலிருந்து வெளிநாட்டு நிதி வெளியேற்றம், வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.


