News April 22, 2025
டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 24, 2025
வங்கி கணக்கில் பணம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ₹289.63 கோடி நிவாரணம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6.55 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட இருப்பதாகவும் வேளாண் துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதன்மூலம், 2.80 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட உள்ளது.
News December 24, 2025
கணவனை போட்டுத்தள்ளி நாடகமாடிய மனைவி

உ.பி.,யில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை <<18656167>>கிரைண்டரில்<<>> போட்டு கொன்ற சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் ஹைதராபாத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ப்ளேஸ்கூல் நடத்தி வந்த பூர்ணிமா (36), கட்டிடத் தொழிலாளியான காதலன் மகேஷின் உதவியோடு, கணவர் அசோக்கை (45) கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். கொன்றதோடு, மாரடைப்பால் கணவன் உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய நிலையில், போலீஸ் விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது.
News December 24, 2025
அண்ணாமலை vs அருண்ராஜ்

2026 TN சட்டமன்ற தேர்தல் களம் ஏற்கெனவே சூடுபிடித்துள்ளது. இதில் MKS, EPS, விஜய் என ஒருபக்கம் மல்லுக்கட்டி வருகின்றனர். அதேபோன்று EX IPS, IAS அதிகாரிகளான பாஜகவின் அண்ணாமலை, தவெகவின் அருண்ராஜ் ஆகியோரின் அரசியல் நகர்வும் கவனம் பெற்றுள்ளது. தரவுகளுடன் பேசுவது, மக்களுடன் பயணிப்பது என இருவரும் தேர்தலை குறிவைத்து செயலாற்றி வருகின்றனர். யாருடைய அரசியல் பணி உங்களுக்கு பிடித்திருக்கிறது? நீங்க சொல்லுங்க!


