News April 22, 2025

டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

image

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 16, 2025

சற்றுமுன்: தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழக அரசு

image

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று TN அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்பட்ட உபரித்தொகையை கணக்கிட்டு போனஸ் & கருணைத் தொகை வழங்க ₹44.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், லாபம் ஈட்டாத கூட்டுறவு சங்கங்கள் இருப்பின், அதன் பணியாளர்களுக்கு ₹3,000, தொடக்க சங்க பணியாளர்களுக்கு ₹2400 போனஸ் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

News October 16, 2025

கடனில் தத்தளிக்கும் தமிழகம்: இபிஎஸ்

image

தமிழகம் கடனில் தத்தளிப்பதாக சட்டப்பேரவையில், இபிஎஸ் குற்றம் சாட்டினார். வருவாய் செலவு அதிகரித்து வரும் நிலையில் எப்படி கடனை கட்டுவீங்க என கேள்வி எழுப்பிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் நிதி மேலாண்மை சரி செய்யப்படும் என சொன்னீர்கள்; ஆனால், கடன் குறையவில்லை எனத் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியில் மூலதனச் செலவு குறைவாகவும், வருவாய் செலவு அதிகளவிலும் இருப்பதாகவும் சாடினார்.

News October 16, 2025

இந்தோனேசியாவை தாக்கிய பயங்கர நிலநடுக்கம்!

image

இந்தோனேசியாவின் அபேபுரா நகரில் இருந்து 200 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 70 கி.மீ ஆழத்தில், ரிக்டர் அளவில் 6.7-ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 62,000 மக்கள் வாழும் இந்த பகுதிக்கு தற்போது வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றாலும், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். சில நாள்கள் முன்பும், ரிக்டர் அளவில் 7.4 நிலநடுக்கம் இந்தோனேசியாவை தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!