News April 2, 2025
காய்கறிகளின் விலை உயர்வு

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. ₹12க்கு விற்கப்பட்ட ஒரு தக்காளி தற்போது ₹24க்கும், வெங்காயம் ₹5 உயர்ந்து ₹25க்கும், உதகை கேரட் ₹15 உயர்ந்து ₹50க்கும், பீன்ஸ் ₹20 உயர்ந்து ₹100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், அவரைக்காய், சுரைக்காய் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மாநில முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட மறுநாளே விலையும் அதிகரித்துள்ளது.
Similar News
News October 29, 2025
மோடிஜி பயப்படாதீர்கள்: ராகுல்

ஒவ்வொரு நாட்டிற்கு டிரம்ப் செல்லும் போதும், PM மோடியை அவமதிக்கிறார்; சமீபத்தில் தென் கொரியாவில் அவமதித்துள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வர்த்தகத்தை காரணம் காட்டி ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாகவும், 7 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், மோடிஜி பயப்படாதீர்கள்; தைரியத்தை வரவழைத்து டிரம்ப்புக்கு பதிலடி கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
Sports Roundup: ஸ்குவாஷில் கலக்கும் அனாஹத் சிங்

*இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ODI-ல் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. *கனடா ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில், இந்தியாவின் அனாஹத் சிங் உலகின் 7-ம் நிலை வீராங்கனை டினே கிலிஸை நேர் செட்களில் வீழ்த்தினார். *ஜெர்மனியில் நடக்கும் ஹைலோ ஓபன் பேட்மிண்டனில் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி. *காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து நிதிஷ் ரெட்டி விலகல்.
News October 29, 2025
நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

தேவர் குருபூஜையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு நாளை(அக்.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டத்தையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் நவ.1-ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. SHARE IT.


