News April 2, 2025
காய்கறிகளின் விலை உயர்வு

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. ₹12க்கு விற்கப்பட்ட ஒரு தக்காளி தற்போது ₹24க்கும், வெங்காயம் ₹5 உயர்ந்து ₹25க்கும், உதகை கேரட் ₹15 உயர்ந்து ₹50க்கும், பீன்ஸ் ₹20 உயர்ந்து ₹100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், அவரைக்காய், சுரைக்காய் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மாநில முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட மறுநாளே விலையும் அதிகரித்துள்ளது.
Similar News
News December 9, 2025
இன்று அனல் பறக்க போகும் நாடாளுமன்றம்

இந்திய அரசியலில் புயலை கிளப்பிவரும் SIR நடவடிக்கை குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடக்க உள்ளது. 10 மணி நேரம் நடக்கவுள்ள இந்த விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். அனைவரது விவாதங்களும் முன்வைக்கப்பட்ட பிறகு அதற்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிப்பார். இங்கு இந்த விவாதம் முடிந்தபிறகு டிச.10-ம் தேதி மாநிலங்களவையில் மீண்டும் விவாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
News December 9, 2025
டிசம்பர் 9: வரலாற்றில் இன்று

*உலக ஊழல் எதிர்ப்பு நாள். *1946 – இந்திய அரசியலமைப்பை வரையறை செய்ய, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது. *1946 – சோனியா காந்தி பிறந்தநாள். *1979 – பெரியம்மை வைரஸ் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. *1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 10 திமுக MLA-க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
News December 9, 2025
இந்தியாவில் மீண்டும் தாக்குதல்.. உளவுத்துறை அலர்ட்

இந்தியாவில் மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த JeM, LeT தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சமீபத்தில் கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளதாகவும், PoK வழியாக நாட்டிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


