News April 24, 2025
பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடக்கம்

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 200 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகளும் சரிந்தன. இதையடுத்து சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து 79,920-ஆக வர்த்தகமாகிறது. நிப்டி 24,284 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. பங்குச்சந்தைகள் கடந்த 7 நாள்களாக உயர்வுடன் காணப்பட்டன. இதனால் சென்செக்ஸ் நேற்று 80,000 புள்ளிகளை கடந்தது.
Similar News
News April 24, 2025
யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு கம்பராமாயணம் பரிசு

யுபிஎஸ்சி 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, கிண்டி ராஜ்பவனுக்கு நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. கேடர்களுக்கு சால்வை அணிவித்த அவர், கம்பராமாயணம் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும், புத்தகம் வாசித்துக்கொண்டே பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News April 24, 2025
கற்பனையில் நினைக்காத வகையில் பதிலடி: PM மோடி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என PM மோடி எச்சரித்துள்ளார். பிஹாரின் மதுபானியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் துணை நிற்கும் எனக் கூறினார்.
News April 24, 2025
இந்த நேரத்தில் தயவு செய்து போனை யூஸ் பண்ணாதீங்க!

நார்மலாகவே போன் அதிகமாக ஹீட்டாகும். அது, சம்மர் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். ஏன், போன் வெடிக்கும் அபாயமும் ஏற்படலாம். அப்படி போன் அதிக ஹீட்டானால், நமக்கு ஒரு எச்சரிக்கை மெசெஜ் வரும். அது மாதிரியான நேரத்தில், என்ன வேலையாக இருந்தாலும், கொஞ்சம் நேரம் போனை யூஸ் பண்ணாதீங்க. போனை கொஞ்சம் நேரம் நிழலான இடத்தில் வைத்துவிட்டு, பிறகு யூஸ் பண்ணுங்க. SHARE IT.