News January 2, 2025

இன்றே கடைசி: பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

பொங்கல் விடுமுறையில் மாற்றம் வரப்போகிறதா?

image

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல, இதுவரை அரசு பஸ்களில் 77,392 பேர் புக்கிங் செய்துள்ளனர். அடுத்த வாரம் ஸ்பெஷல் பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனால், புக்கிங் எண்ணிக்கை மேலும் உயரும். எனவே, சிரமமின்றி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக, பொங்கலுக்கு முதல் நாளான ஜன.14-ல் விடுமுறை விட பலரும் வலியுறுத்தியுள்ளனர். அரசும் விரைவில் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 31, 2025

ஒரு பக்கம் காலண்டர்: ஒரே பக்கத்தில் 365 நாட்கள்

image

ஒவ்வொரு மாதமும் காலண்டர் பக்கங்களை புரட்டுவது சிரமமாக இருக்கிறதா? முழு வருடத்தையும் ஒரே இடத்தில் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்த ஒரு பக்கம் காலண்டரின் சிறப்பே இதுதான். இதில், எந்த மாதத்தில், எந்த வாரம், எந்த நாள் வருகிறது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம். இதை நீங்கள், உங்கள் அலுவலக மேசைகள் அல்லது வீட்டின் சுவர்களில் வைத்துக்கொள்ளுங்கள். இதை SHARE செய்து புத்தாண்டை வரவேற்போம்.

News December 31, 2025

தமிழகத்தில் பயத்துடனே மக்கள் வாழ வேண்டுமா? EPS

image

திருத்தணி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த <<18721523>>தாக்குதலுக்கு <<>>EPS கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல், TN-ல் நடந்த வேறு சில சம்பவங்களை சுட்டிக்காட்டி, போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு, CM ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே மக்கள் வாழ வேண்டுமா என்றும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!