News January 2, 2025

இன்றே கடைசி: பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 27, 2025

விஜய் உண்மையான தளபதி, மற்றவர்கள் வெட்டி தளபதி: KAS

image

2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெல்லும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் பேசிய அவர், பல விவகாரங்களுக்கு விஜய் வாய் திறப்பதில்லை என சிலர் விமர்சிக்கின்றனர்; ஆனால், நேரம் வரும்போது அவர் பேசுவார் என்று குறிப்பிட்டார். படைக்குத் தலைமை வகிப்பவர், வென்று நாட்டை ஆள்பவரே தளபதி என்று கூறிய அவர், விஜய் தான் உண்மையான தளபதி எனவும், மற்றவர்களெல்லாம் வெட்டி தளபதி என்றும் விமர்சித்தார்.

News December 27, 2025

வாக்காளர்களை சேர்க்க 2 நாள்கள் சிறப்பு முகாம்!

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அதன்படி, 75,000 பூத்துகளிலும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவோ (அ) பெயரை நீக்கவோ படிவம் 7-ஐ பூர்த்திசெய்ய ECI அறிவுறுத்தியுள்ளது. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 27, 2025

தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு

image

தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து TNSTC சார்பில் இயக்குவது தொடர்பான வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசியமயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் மட்டுமே இந்த பஸ்கள், தொலைதூர பயணங்களுக்காக இயக்கப்படும். இதன் மூலம் பண்டிகை காலங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்கலாம் என அரசு கூறுகிறது. இதுபற்றி பொதுமக்கள் 30 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அரசு கூறியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!