News January 2, 2025
இன்றே கடைசி: பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
40 வயதில் 40 கோல்கள்: ரொனால்டோ சாதனை!

கால்பந்து வரலாற்றிலேயே அதிகமுறை, ஒரு ஆண்டில் 40-க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2010 முதல் 2025 வரை, 2019-ம் ஆண்டை தவிர மொத்தம் 14 முறை, அவர் 40-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். 40 வயதானாலும், களத்தில் தனது வேகத்தாலும், கோல்களாலும் இன்னும் கால்பந்து உலகை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். 13 முறையுடன் மெஸ்ஸி 2-வது இடத்தில் உள்ளார்.
News December 28, 2025
உங்க ஆதார் தவறாக யூஸ் பண்றாங்க என சந்தேகமா?

உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் ★myAadhaar போர்ட்டலுக்கு சென்று, மொபைல் எண்ணுடன் Login செய்யுங்க ★மெனுவில் ‘Authentication History’-ஐ தேர்ந்தெடுக்கவும் ★ஆதார் பயன்பாட்டு விவரங்கள் அறிய, தேதி வரம்பைத் தேர்வு செய்து பயன்பாட்டை அறியுங்கள் ★அப்படி சந்தேகமான செயல்பாடு தெரிந்தால், 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்தோ அல்லது help@uidai.gov.in -க்கு மின்னஞ்சல் அனுப்பவும். SHARE.
News December 28, 2025
உள்ளூர் போட்டிகளிலும் கெத்து காட்டிய விராட் கோலி

சர்வதேச போட்டிகளை தொடர்ந்து, உள்ளூர் தொடர்களிலும் விராட் கோலியும் சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் இப்போது விஜய் ஹசாரே கோப்பையில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கோலி படைத்துள்ளார். டெல்லி அணிக்காக VHT-ல் விளையாடி வரும் அவர் நடப்பு சீசனில் களம் கண்ட 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். 2027 WC-ல் பங்கேற்பதற்காக இப்போது உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடுகிறார்.


