News January 2, 2025
இன்றே கடைசி: பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
நடிகர் ஜெயராம் கைது செய்யப்படுகிறாரா?

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் <<18367317>>ஜெயராம்<<>> முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், டிசம்பரில் நடைபெறும் கேரள உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, துவார பாலகர் சிலைகள், சபரிமலை கோயில் கதவு நிலைகளை வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த விவகாரத்தில் ஜெயராமை கைது செய்ய, SIT முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 27, 2025
7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

தென்மேற்கு வங்க கடலில் <<18399959>>காற்றழுத்த தாழ்வு மண்டலம்<<>> உருவான நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற IMD அறிவுறுத்தியுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. வட தமிழக கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 50- 60 கி.மீ., வேகத்தில் வீசும் என கூறப்பட்டுள்ளது.
News November 27, 2025
செங்கோட்டையனை தொடர்ந்து தங்கமணி விலகலா?

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்கள் குறித்து நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. இதில், வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், EX மினிஸ்டர் தங்கமணி, இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளாராம். இதனால், செங்கோட்டையனை போலவே, தங்கமணியும் அதிமுகவில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் உண்மை தெரியவரும்.


