News January 2, 2025

இன்றே கடைசி: பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 23, 2025

விலை கிடுகிடு உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

image

TN-ல் தக்காளி, கத்திரிக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் இன்று மொத்த விலையில் 1 கிலோ தக்காளி ₹50 – ₹60-க்கும், சில்லறை விற்பனையில் ₹80 – ₹100 வரை விற்பனையாகிறது. அதேபோல், சாம்பார் வெங்காயம் கிலோ ₹70 – ₹80, கத்தரிக்காய் ₹50 – ₹70-க்கு விற்பனையாகிறது. கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ₹58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News November 23, 2025

கர்நாடகா காங்கிரஸில் என்ன தான் நடக்கிறது?

image

கர்நாடகா காங்கிரஸில் கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் <<18345295>>டிகே சிவக்குமார்<<>> ஆதரவு MLA-க்கள் கார்கேவை சந்தித்த நிலையில், நேற்று இரவு சித்தராமையா சந்தித்துள்ளார். அமைச்சரவை, CM மாற்றம் குறித்த செய்திகள் போலியானவை எனவும், எத்தனை MLA-க்கள் சென்று சந்தித்தாலும், தலைமை எடுப்பதுதான் இறுதி முடிவு, அதற்கு அனைவரும் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

இந்த மாத்திரை அதிகம் எடுக்குறீங்களா?கேன்சர் வரும்!

image

தொட்டதுக்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரையை சாப்பிடுற ஆளா நீங்க? ஆன்டிபயாடிக்கை அதிகமாக எடுத்தால் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். இதனால், குடல் ஆரோக்கியம் சீர்குலையும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும், நாளடைவில் கேன்சர் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். எனவே, டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளுங்கள். பலரை கேன்சரில் இருந்து காக்கும், SHARE THIS.

error: Content is protected !!