News January 2, 2025
இன்றே கடைசி: பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
வெற்றிக்கான நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்!

NDA கூட்டணிக்கு இன்னும் 1 மாதத்தில் புதிய கட்சிகள் வரவுள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் NDA கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் நாள்களை எண்ணிக் கொண்டிருப்பதாக கூறிய அவர், ஒத்தக் கருத்துடையவர்கள் கூட்டணிக்கு வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் திமுக அகற்றப்படவேண்டும் எனவும் மக்கள் நிம்மதியாக இருக்கவேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News December 30, 2025
உங்க உயிரை காப்பாற்ற வெறும் ₹10 போதும்

திடீர் Heart Attack-ல் உயிரிழப்பதை தடுக்க, ‘Ram Kit’-ஐ கான்பூர் ஹாஸ்பிடல் பரிந்துரைக்கிறது. இதில் Ecosprin, Rosuvastatin, Sorbitrate ஆகிய 3 tablets இருக்கும். இதன் மொத்த விலை வெறும் ₹10 தான். நெஞ்சுவலி வந்தால், உடனே இவற்றை உட்கொண்டால், இதய செயல்பாடு சீராகும் என கூறப்படுகிறது. உடனே ஹாஸ்பிடலுக்கு சென்றால், உயிரிழக்கும் ஆபத்தை தடுக்கலாம். டாக்டரிடம் ஆலோசித்து, இந்த ‘kit’ஐ கையில் வெச்சிக்கோங்க!
News December 30, 2025
BREAKING: மீண்டும் கைது.. பதற்றம் உருவானது

சென்னை கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் குண்டுகட்டாக கைது செய்த நிலையில், அவர்களில் சிலர் மயக்கமடைந்தனர். முன்னதாக, இன்று காலை அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட <<18711270>>தூய்மை பணியாளர்கள் கைது<<>> செய்யப்பட்டனர்.


