News November 23, 2024
வரலாற்றில் இன்று

1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1956 – அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்,
1980 – இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,800 பேர் உயிரிழந்தனர்.
2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2003 – திமுக மூத்த தலைவர் முரசொலி மாறன் மறைந்தார்.
Similar News
News July 9, 2025
டெஸ்ட் தரவரிசை: மேல ஏறி வரும் சுப்மன் கில்!

ENG பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 886 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 2-வது இடத்தில் ENG-ன் ஜோ ரூட், 3-வது இடத்தில் NZ-ன் கேன் வில்லியம்சன் ஆகியோர் உள்ளனர். அதே நேரத்தில், இந்திய கேப்டன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை(807 புள்ளிகள்) பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் உள்ளனர்.
News July 9, 2025
IAS என்றால் கோர்ட்டை விட மேலானவரா? நீதிபதி கேள்வி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை நிறுத்திவைக்க கோரி அவர் HC-ல் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி, IAS அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என நினைத்துக் கொள்கிறாரா என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். கோர்ட்டின் அதிகாரத்தை நாங்கள் காட்டவா என்று வினவிய அவர், ஆணையரை நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
News July 9, 2025
திமுக EX எம்எல்ஏ காலமானார்.. ஸ்டாலின் இரங்கல்

காவேரிபட்டினம் தொகுதி திமுக EX எம்எல்ஏ கோவிந்தசாமி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 1964-65ம் ஆண்டுகளில் இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மொழிப்போர் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் கோவிந்தசாமி என புகழாரம் சூட்டியுள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகனோடு இணைந்து பணியாற்றியவர் கோவிந்தசாமி என்றும் தெரிவித்துள்ளார்.