News November 23, 2024
வரலாற்றில் இன்று

1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1956 – அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்,
1980 – இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,800 பேர் உயிரிழந்தனர்.
2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2003 – திமுக மூத்த தலைவர் முரசொலி மாறன் மறைந்தார்.
Similar News
News November 6, 2025
அந்த மேஜிக் மீண்டும் நடக்குமா?

ரஜினி என்றாலே ஜாலியான, குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் மாஸ் கமர்சியல் ஹீரோ. ஆனால், அப்படியான ரஜினியை ‘பேட்ட’ படத்திற்கு பிறகு பெரிதாக பார்க்க முடியவில்லை. எல்லாமே ரொம்ப சீரியஸான ரத்தம் தெறிக்கும் அதிரடி படங்களாகவே சமீபத்தில் வெளிவந்துள்ளன. ஆனால், நாம் ரசித்து கொண்டாடி தீர்த்த ரஜினியை மீண்டும் சுந்தர்.சி திரையில் கொண்டுவருவாரா என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் உள்ளனர். சாதிப்பாரா சுந்தர்.சி?
News November 6, 2025
இன்று கனமழை.. 9 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி & வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, தி.மலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். எனவே, இந்த மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்.
News November 6, 2025
Office போகணும்னாலே கஷ்டமா இருக்கா? இந்த டீ குடிங்க!

நாள்பட்ட மன அழுத்தம், உடல் சோர்வு, Anxiety காரணமாக காலை எழுந்ததும் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம். இதனால் ஆபீஸுக்கு செல்வதில் இருந்து, படுக்கையை விட்டு எழுந்திருக்கும் சாதாரண காரியங்கள் கூட கஷ்டமானதாக தெரியும். இதனை சரி செய்ய, மனதையும் உடலையும் சமநிலைப்படுத்தும் துளசி டீ-யை காலையில் பருகுங்கள். இதில் இஞ்சி & தேனை சேர்த்தும் குடிக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். SHARE THIS.


