News May 2, 2024
இன்று ஒரே நாளில் 417 வழக்குகள் பதிவு

சென்னையில் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு செய்துள்ளது போக்குவரத்துக் காவல்துறை. இதில் 121 போலீஸ் வாகனங்களும் அடக்கம். முதல்நாளில் பிடிபட்டோருக்கு ரூ.500 அபராதம் விதித்து அறிவுரை வழங்கிய போலீசார், அடுத்த முறை பிடிபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படுமென எச்சரித்து அனுப்பினர். வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை இன்று அமலுக்கு வந்தது.
Similar News
News January 30, 2026
அகிம்சை அமைதியான நாள் இன்று!

ஜனவரி 30, 1948, இந்தியா அகிம்சை ஒளியை இழந்த நாள். உடம்பில் குண்டு பாய, ‘ஹேராம்’ என்ற முழக்கத்துடன், மகாத்மா காந்தி தனது இன்னுயிரை துறந்த நாள் இன்று. உலகிற்கு அகிம்சையின் சக்தியை எடுத்துரைத்த அவரின் நினைவுநாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடவுளுக்கு மதம் இல்லை என்றும் உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும் போன்ற அவரின் வார்த்தைகள் இன்றும் உலகை வழிநடத்தி வருகின்றன.
News January 30, 2026
PT உஷாவின் கணவர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

இந்திய கபடி Ex வீரரும், PT உஷாவின் கணவருமான சீனிவாசன்(64) மரணமடைந்துள்ளார். CISF இன்ஸ்பெக்டரான அவர், நேற்று இரவு கேரளாவின் திக்கோடி உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். விஷயமறிந்த PT உஷா டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார். அவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்களும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 30, 2026
EPS-ஐ போல கனிமொழி முகத்தை மூடவில்லை: SP

கனிமொழியின் டெல்லி பயணம் குறித்து <<18998266>>EPS<<>> வைத்த விமர்சனத்துக்கு செல்வபெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். EPS போல முகத்தை மூடிக்கொண்டு, மாற்று காரில் சென்று கனிமொழி ராகுல் காந்தியை சந்திக்கவில்லை என அவர் சாடியுள்ளார். மேலும், ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்குமா என்ற கேள்விக்கு, அதுகுறித்து காங்கிரஸின் தலைமையும், திமுகவின் தலைமையையும் இணைந்து முடிவு செய்யும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.


