News November 19, 2024

உணவு உண்ண மறுக்கும் திருச்செந்தூர் யானை

image

திருச்செந்தூர் பெண் யானை தெய்வானை நேற்று பாகனையும் அவரது உறவினரையும் கொன்றது. இதற்கான காரணத்தை வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தெய்வானை பெண் யானை என்பதால் அதற்கு மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து, நேற்று முதல் தெய்வானை உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறது. அதன் மனநிலையை அறிய அலுவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

Similar News

News August 17, 2025

முதலில் SBI.. அடுத்து HDFC.. உயரும் கட்டணம்!

image

<<17416427>>SBI வங்கியை<<>> தொடர்ந்து IMPS முறையில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்களை HDFC வங்கியும் உயர்த்தியுள்ளது. அதன்படி, ₹1,000 வரை ₹2.5, ₹1,000 – ₹1 லட்சம் வரை ₹5, ₹1 லட்சத்திற்கு மேல் ₹15 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், NEFT முறையில் பணம் அனுப்புவதற்கும் ₹24 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. மேலும், சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு இனி 1 ஆண்டுக்கு 10 பக்கங்களை கொண்ட செக் புக் மட்டுமே இலவசம். SHARE IT.

News August 17, 2025

தவறான புகாரால் எங்களை மிரட்ட முடியாது: ஞானேஷ்குமார்

image

அரசியலமைப்பின் வழியில் தன்னாட்சி அமைப்புடன் இயங்கும் தங்களை தவறான புகாரால் யாரும் மிரட்ட முடியாது என ECI தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார். BJP-க்கு ஆதரவாக மகாராஷ்டிரா, கர்நாடகா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ECI, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார். மேலும், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

News August 17, 2025

பொன்னியின் செல்வன் போல் திராவிட மாடல் ஆட்சி: ரகுபதி

image

அசல் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குகளைச் செலுத்தினாலே திமுக வென்றுவிடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். CM தொகுதியில் 9,000 போலி வாக்குகள் இருந்ததாக <<17426871>>அனுராக்<<>> தாக்கூர் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, தங்களுக்கு போலி வாக்காளர்கள் தேவையில்லை என்றார். பொன்னியின் செல்வனைப் போல் 2-ம் பாகம், 3-ம் பாகம் என திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

error: Content is protected !!