News August 17, 2025

தவறான புகாரால் எங்களை மிரட்ட முடியாது: ஞானேஷ்குமார்

image

அரசியலமைப்பின் வழியில் தன்னாட்சி அமைப்புடன் இயங்கும் தங்களை தவறான புகாரால் யாரும் மிரட்ட முடியாது என ECI தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார். BJP-க்கு ஆதரவாக மகாராஷ்டிரா, கர்நாடகா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ECI, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார். மேலும், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Similar News

News December 15, 2025

சோஷியல் மீடியாவில் ஆதார் போட்டோ போடுறீங்களா?

image

யாரும் சோஷியல் மீடியாவில் தங்களது ஆதார் அட்டையின் போட்டோவை பதிவிட வேண்டாம் என UIDAI எச்சரித்துள்ளது. நிதி மோசடிகள், அடையாள திருட்டுகள் போன்றவற்றை தவிர்க்க, இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகம் இருந்தால், சைபர் கிரைம் Helpline 1930, UIDAI ஹெல்ப்லைன் 1947 அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம். SHARE IT.

News December 15, 2025

40 தொகுதிகளில் காங்., போட்டியா?

image

டெல்லியில் காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை செய்து வருகிறார். இதன்பின், ராகுலை சந்தித்து திமுக கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கும் அவர், எந்தெந்த தொகுதிகளில் காங்., வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான லிஸ்ட்டையும் வழங்கவிருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்., குறிவைத்துள்ளதாம்.

News December 15, 2025

BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

image

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சியில் 2-ம் கட்ட திட்ட விரிவாக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் மகளிருக்கு ₹1,000 செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே பயன்பெற்று வரும் 1.13 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 28-வது தவணை தற்போது வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வந்துவிட்டதா?

error: Content is protected !!