News July 28, 2024
அச்சுறுத்தும் வகையில் கருத்துகள்: காங். எம்பி

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர்களை அச்சுறுத்தும் வகையில் மத்திய அமைச்சர்கள் கருத்துகள் தெரிவிப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை காங். துணைத்தலைவர் கவுரவ் கோகாய் கடிதம் எழுதியுள்ளார். சோனியா காந்தி மற்றும் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் குறித்து அவையில் பேசக்கூடாத வார்த்தைகளை அமைச்சர்கள் ராஜிவ் ரஞ்சன் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு பேசியதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 3, 2025
BREAKING: கொந்தளித்தார் விஜய்

சென்னை உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக செய்யாததால் கொஞ்சமாக பெய்த மழைக்கே மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக விஜய் விமர்சனம் செய்துள்ளார். மீதமுள்ள காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு ஆளாகாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெகவினர் களத்திற்கு சென்று உதவி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
News December 3, 2025
BREAKING: அமித்ஷாவை சந்தித்தார் ஓபிஎஸ்

டெல்லி விரைந்துள்ள ஓபிஎஸ், சற்றுமுன் அமித்ஷாவை சந்தித்து பேசிவருகிறார். NDA கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, அமித்ஷாவை ஓபிஎஸ் சந்திப்பது இதுவே முதல்முறை. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை கட்சியாக பதிவு செய்து, NDA கூட்டணியில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இன்னும் சற்றுநேரத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
News December 3, 2025
இன்று ஒரே நாளில் விலை ₹5,000 உயர்ந்தது

இந்திய சந்தையில் வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று(டிச.3) ஒரே நாளில் கிலோவுக்கு ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால் 1 கிராம் ₹201-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,01,000-க்கும் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகை காலமான அக்டோபரில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளி அக்.15 அன்று 1 கிராம் ₹207-ஐ தொட்டது. அதன் பின்னர் சரிந்து வந்த நிலையில், மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.


