News August 5, 2024

ஒடிஷாவில் பனைமரம் அதிகம் வளர்ப்பதன் காரணம் இதுதான்!

image

மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அதிக அளவிலான பனை மரங்களை வளர்க்க ஒடிஷா அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 19 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மற்ற மரங்களை விடவும் பனை மரங்கள் உயரமாக இருப்பதால் அவை மின்னலை எளிதில் தடுக்கும் தன்மை கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒடிஷாவில் கடந்த 11 ஆண்டுகளில் மின்னல் தாக்கி 3,790 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News

News April 7, 2026

சிறு, குறு நிறுவனங்களுக்கு அரசின் HAPPY NEWS

image

போரினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ₹2.5 லட்சம் கோடி கடன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்படி, போரால் பாதிக்கப்பட்டு நிறுவனங்களால் கட்டமுடியாத நிலை ஏற்பட்டால், ₹100 கோடி வரையான கடன்களுக்கு, 90% வரை அரசு உத்தரவாதம் வழங்கும். கோவிட் காலத்திலும் தொழில்கள் பாதிக்கப்படாமல் இருக்க இதுபோன்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

News April 7, 2026

அவர் என்ன MGR-ஆ.. PTR தான? சுந்தர் சி

image

ஜெயிக்கவே முடியாது என சொல்ல PTR என்ன MGR-ஆ? என சுந்தர் சி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக என்பது அசைக்க முடியாத கட்சி இல்லை என்ற அவர், பலமாக இருப்பதை போல காட்டிக்கொள்வதுதான் அவர்களின் பலமே என விமர்சித்துள்ளார். மேலும், NDA கூட்டணி அன்பால் சேர்ந்த கூட்டணி எனவும், திமுக கூட்டணியில் கூச்சலும் குழப்பமும் இருப்பதால், அது ‘பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனால், பேஸ்மெண்ட் வீக்கான கூட்டணி’ எனவும் கிண்டலடித்தார்.

News April 7, 2026

சருமம் பொலிவா இருக்கணுமா? இத குடிங்க!

image

பெரிய செலவு எதுவும் இல்லாமலே சருமத்தை பொலிவாக்க அற்புத பானம் உள்ளது. ➤இதற்கு, இரவு முழுவதும் நீரில் உலர் திராட்சையை ஊறவையுங்கள் ➤அந்த நீரை அடுத்தநாள் காலை குடிக்க வேண்டும். இதனால், ➤சருமத்திற்கு இயற்கை பளபளப்பு கிடைக்கும் ➤பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகளின் அடையாளங்கள் மறையும் ➤தூக்கத்தையும் நன்கு மேம்படுத்தும் என்பதாலும் கூட சருமம் பொலிவு பெறும் என நிபுணர்கள் சொல்கின்றனர். SHARE.

error: Content is protected !!