News May 1, 2024
தண்ணீர் பந்தல் திறக்க தடையில்லை

தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க தடையில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில், அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி தண்ணீர் பந்தல் அமைக்கவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதனைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News March 17, 2026
‘தவறு செய்துவிட்டேன்’.. ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டார்

முந்தைய அதிமுக ஆட்சியில் EPS-க்கு ஆதரவளித்ததற்கு OPS மன்னிப்பு கேட்டுள்ளார். நெல்லை திமுக கூட்டத்தில் பேசிய அவர், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் EPS-க்கு தான் ஆதரவளித்தது மிகப்பெரிய தவறு என்றும், அவருக்கு எதிராக வாக்களித்திருந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News March 17, 2026
செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை முடிவடைந்தது. 6 மணி நேர விசாரணையில், கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என தவெகவினர் வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக, விஜய் பரப்புரையின் நடுவே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது தொடர்பாகவும், மக்கள் பாதிக்கபட்டது குறித்து எப்போது தகவல் கிடைத்தது; எப்போது ஹாஸ்பிடல் சென்றார் என்பது தொடர்பாகவும் கேட்கப்பட்டது.
News March 17, 2026
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மேலும் ₹4,000.. GOOD NEWS

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மாதாந்திர உதவித்தொகை ₹ 5,000 லிருந்து ₹9,000 மாக உயர்த்தப்படலாம் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், 21-24 வரை மட்டுமே இருந்த வயது 18-25-ஆக உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதே போல, 12 மாதங்களாக இருந்த இன்டர்ன்ஷிப் காலம், 6- 9 மாதங்களாகவும் குறைக்கப்படவுள்ளதாம். விரைவில் இந்த மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


