News December 3, 2024

Phone வாங்க காசு இல்லை.. தாயை மிரட்டிய மகன்

image

ஆறாவது விரலான போன் படுத்தும் பாடு சொல்லி மாளாது. மஹாராஷ்டிரா, நாக்பூரில் தாய் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது 18 வயது மகன் போன் வாங்க ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளான். அதற்கு பணம் இல்லையென தாய் பதிலளிக்க, கோபத்தின் உச்சிக்கு சென்றவன், வாள் எடுத்துக் காட்டி தாயையும் சகோதரியையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளான். போன் நம்மை ஆட்டி வைக்கிறது பார்த்தீர்களா?

Similar News

News July 11, 2025

₹36,900 சம்பளத்தில் அரசு பள்ளிகளில் 1,996 காலியிடங்கள்

image

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 1,996 காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed, B.Sc.Ed படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும் (இதில் தமிழ் கட்டாயம்). ₹36,900- ₹1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News July 11, 2025

கருணாநிதி வாழ்ந்த தெருவில் உறுப்பினர் சேர்க்கை: CM

image

திருவாரூரில் கருணாநிதி வாழ்ந்த சன்னதி தெருவில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு மூலம் 54,310 புதிய உறுப்பினர்களையும், 30,975 குடும்பங்களையும் திமுகவில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதி இணைத்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். திருச்சுழியை முந்திச்செல்ல களத்தில் பணியாற்றுபவர்களுக்கு வாழ்த்துகள் எனவும் பதிவிட்டுள்ளார்.

News July 11, 2025

மல்லை சத்யா திமுகவில் இணைய உள்ளதாக தகவல்

image

மல்லை சத்யா, துரை வைகோ இடையே இருந்த மோதல் தற்போது வைகோ, மல்லை சத்யா இடையேயான மோதலாக மாறியுள்ளது. பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததுபோல் மல்லை சத்யா எனக்குத் துரோகம் செய்துவிட்டார் என வைகோ பேசியுள்ளார். இந்நிலையில், வைகோவின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது எனவும், அதிர்ச்சியை அளிப்பதாகவும் கூறியுள்ள மல்லை சத்யா, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!