News September 28, 2025

விஜய்க்கு எதிராக பாதிக்கப்பட்டவரே வழக்கு

image

தவெக பரப்புரைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த செந்தில் கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்துள்ளார். முறையான பாதுகாப்பு இல்லாமல் இனி தவெக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.

Similar News

News September 28, 2025

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் PHOTOS

image

கரூரில் 40 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்து 20 மணிநேரங்களை கடந்தும் அங்கு மரண ஓலங்கள் தொடர்ந்து வருகிறது. 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் உடற்கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் 3 பேர், ஒரே கிராமத்தில் 5 பேர் என அடுத்தடுத்த துயரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் கடைசி போட்டோக்கள் காண்போரை கண்கலங்க வைக்கிறது. #RIP

News September 28, 2025

2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்

image

ஜம்மு & காஷ்மீரின் குப்வாரா பகுதியில் 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் தற்போது கொல்லப்பட்டுள்ளனர். மேலும், உளவுத்தகவல்கள் அடிப்படையில் எல்லையில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

News September 28, 2025

FLASH: அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார்

image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார். முன்னதாக, விஜய் பிரசாரம் செய்த இடத்தை சுற்றியுள்ள கடைகள், வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 110 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!