News September 28, 2025
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் PHOTOS

கரூரில் 40 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்து 20 மணிநேரங்களை கடந்தும் அங்கு மரண ஓலங்கள் தொடர்ந்து வருகிறது. 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் உடற்கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் 3 பேர், ஒரே கிராமத்தில் 5 பேர் என அடுத்தடுத்த துயரங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் கடைசி போட்டோக்கள் காண்போரை கண்கலங்க வைக்கிறது. #RIP
Similar News
News November 13, 2025
சுகர் இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?

சுகர் இருக்கும்போது தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என டாக்டர்கள் சொல்கின்றனர். எந்த வகை நீரிழிவு நோய் இருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாக்களுக்கு சரியான அளவில் இன்சுலின் உற்பத்தியாகிறதாம். இதனால் எதிர்காலத்தில் குழந்தைக்கு டைப் 2 டயாபடிஸ் வருவதற்கான வாய்ப்பும் குறைவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். இந்த தகவலை தாய்மார்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 13, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும் HAPPY NEWS

TN-ல் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை (நவ.14) குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. நேருவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவ.14-ஐ மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களே ரெடியா..!
News November 13, 2025
தமிழ் நடிகர் கைது விவகாரத்தில் புதிய திருப்பம்

மோசடி புகாரில் நெல்லையில் வைத்து பிக்பாஸ் பிரபலம் தினேஷ் <<18275184>>கைது<<>> செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தன்னை கைது செய்யவில்லை என்றும், இது நன்கு திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட போலியான புகார் என்றும் தினேஷ் விளக்கமளித்துள்ளார். வள்ளியூரில் வேறு ஒரு பிரச்னையில் தான் வழக்கு ஒன்றை எதிர்கொண்டு வருவதாகவும், தனது தொழிலில் உள்ள ஒரு சிலரால் இந்த புகார் போலியாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


