News September 13, 2024
காவல்துறை அமைச்சரிடமே ஆட்டையை போட்ட திருடன்

இங்கிலாந்தில் காவல்துறை அமைச்சரின் Bag திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வருடாந்திர போலீஸ் மாநாட்டில் அமைச்சர் டேம் டயானா ஜான்சன் பங்கேற்று, மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தார். அப்போது அவரது பை திருடப்பட்டது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனிடையே, சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின் பிணையில் விடுவித்தனர்.
Similar News
News December 6, 2025
சென்னை புத்தக கண்காட்சி ஜன.7-ல் தொடக்கம்

புத்தக வாசிப்பாளர்களின் திருவிழாவான சென்னை புத்தக கண்காட்சி ஜன.7-ல் தொடங்கும் என பபாசி அறிவித்துள்ளது. வழக்கம்போல, நந்தனம் YMCA மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. மொத்தமாக 13 நாட்கள் என ஜன.19-ம் தேதி வரை கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்படும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 6, 2025
உலக சாதனை படைத்த நிதிஷ் குமார்

உலக சாதனை புத்தகத்தில் (லண்டன்) பிஹார் CM நிதிஷ் குமார் இடம்பிடித்துள்ளார். பிஹார் தேர்தலில் வெற்றிபெற்று, அவர் 10-வது முறையாக முதல்வராக பதவியேற்றதை அங்கீகரித்து அவரது பெயர் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டணியில் கருத்து வேறுபாடு காரணமாக அவர், பலமுறை ராஜிநாமா செய்திருந்தாலும் மீண்டும் RJD அல்லது BJP உடன் கூட்டணி அமைத்து CM அரியணையில் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 6, 2025
ICC விருது: ஷபாலி வர்மாவுக்கு கிடைக்குமா?

ICC-யின் நவம்பர் மாத சிறந்த வீராங்கனைக்கான விருது பட்டியலில் ஷபாலி வர்மா இடம்பெற்றுள்ளார். மகளிர் உலகக் கோப்பை தொடரில் அவர் 2 போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இறுதிப்போட்டியில் 87 ரன்கள் குவித்ததுடன் 2 விக்கெட்களும் வீழ்த்தி இந்தியா மகுடம் சுடுவதற்கு உதவினார். இப்பட்டியலில் தாய்லாந்தின் புத்தவோங், UAE-ன் ஈஷா ஒசாவும் உள்ளனர். எனினும், ஷபாலிக்கே விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.


