News March 18, 2024

கனவால் வந்த வினை.. மாணவி தற்கொலை

image

தற்கொலை செய்வது போல நாள்தோறும் கனவு வந்ததை தாங்க முடியாத 12ஆம் வகுப்பு மாணவி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த மாணவி, பல நாட்களாக இந்த பிரச்னையை சந்தித்துள்ளார். இது குறித்து கடிதம் எழுதியுள்ள அவர், அடிக்கடி வரும் கனவால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே ‘3’ படத்தில் வருவது போல தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

Similar News

News February 11, 2026

நாளை முதல் பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கும்!

image

அரசு நிகழ்ச்சிகளில் <<19107777>>வந்தே மாதரம்<<>> பாடலை இசைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிகளில் அன்றாட வகுப்புகளை தொடங்குவதற்கு முன், இப்பாடலை கூட்டுப் பாடலாக பாடி மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இப்புதிய அறிவிப்பால், நாளை முதல் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை பாட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

News February 11, 2026

ஆபிஸில் சீக்ரெட்டை ஷேர் பண்றீங்களா?

image

ஆபிஸில் சக ஊழியர்களிடம் சீக்ரெட்களை பகிர்வது சரியானது அல்ல என சைக்காலஜிஸ்டுகள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, பர்சனல் லைஃப், நிதி நிலை குறித்து பேசவே கூடாதாம். இதற்கு சில காரணங்களும் சொல்கிறார்கள். சம்பளம் குறித்து பேசுவது பொறாமைக்கு வழிவகுக்கலாம். பர்சனல் விஷயங்களை பகிர்ந்தால், ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் பிரிய, நம்மை குறித்த சீக்ரெட் வெளியாகிவிடுமோ என்ற தேவையற்ற பதற்றத்தை கொடுக்கும். உஷாரா இருங்க!

News February 11, 2026

நடிகர் ராமராஜன் விவாகரத்து.. பிரபல நடிகை கண்ணீர்

image

ராமராஜன் – நளினி தம்பதி கடந்த 2000-ல் விவாகரத்து பெற்றனர். ராமராஜனும் சேது பட நடிகை அபிதாவும் காதலிப்பதே நளினி உடனான விவாகரத்திற்கு காரணம் என அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இதுகுறித்து, 25 ஆண்டுகளுக்கு பின், அபிதா மனம் திறந்துள்ளார். ராமராஜன் தன்னை திருமணம் செய்யப் போவதாக வதந்தி பரவியபோது, தினமும் அழுது கொண்டிருந்தேன் என அபிதா குறிப்பிட்டுள்ளார். மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!