News March 18, 2024
கனவால் வந்த வினை.. மாணவி தற்கொலை

தற்கொலை செய்வது போல நாள்தோறும் கனவு வந்ததை தாங்க முடியாத 12ஆம் வகுப்பு மாணவி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த மாணவி, பல நாட்களாக இந்த பிரச்னையை சந்தித்துள்ளார். இது குறித்து கடிதம் எழுதியுள்ள அவர், அடிக்கடி வரும் கனவால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே ‘3’ படத்தில் வருவது போல தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
Similar News
News December 6, 2025
மதுரை புதிய மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர்

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கையின் பெயரை சூட்டுவதில் தனக்கு பெருமை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ₹150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், 950 மீ., நீளம் கொண்டது.
News December 6, 2025
அன்புமணி மீது ராமதாஸ் கிரிமினல் புகார்

பாமக உள்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் இன்னும் சற்றுநேரத்தில் சிபிஐயில் புகார் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாமக பொதுக்குழு குறித்த போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிபிஐ இயக்குனரை நேரில் சந்தித்து ஜி.கே.மணி புகார் மனுவை கொடுக்கவிருக்கிறார்.
News December 6, 2025
பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் கேரி-ஹிரோயுகி டகாவா(75) காலமானார். ஜப்பானில் பிறந்த இவர் ஹாலிவுட், ஜப்பானிய மொழிகளில் வெளிவந்த பல வெற்றி படங்களில் சண்டை காட்சிகளில் அசத்தியவர். நமக்கெல்லாம் ஒரு ஹீரோவாக ஜாக்கிசான் எப்படியோ, அப்படி வில்லனாக வந்து இந்திய ரசிகர்களின் மனங்களை வென்றவர். Mortal Kombat, Mortal Kombat 11 உள்ளிட்ட ஏராளமான படங்களில் புகழ் பெற்ற டகாவாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP


