News May 17, 2024
அவதூறு பரப்புவதே பிரதமரின் வேலையாக உள்ளது

பிரதமர் மோடி அவதூறு பரப்புரை மூலம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 4 கட்ட வாக்குப்பதிவில் பாஜகவுக்கான ஆதரவு குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், அதன் காரணமாக மோடி வாய்க்கு வந்ததை எல்லாம் பரப்புரையில் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் மோடி கூறி வருவதற்கு மக்கள் தேர்தலில் தண்டனை கொடுப்பார்கள் என்றார்.
Similar News
News August 9, 2025
ஒரு தொகுதிக்கே 6 மாதங்கள் ஆனது: ராகுல்

ஒரு தொகுதியில் உள்ள போலி வாக்குகளை கண்டுபிடிக்க தங்களுக்கு 6 மாதங்கள் ஆனதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பட்டியலை தேர்தல் ஆணையம் தரவில்லை என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், முறைகேட்டில் ஈடுப்பட்ட ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகளும் என்றாவது ஒருநாள் இதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
இந்திய அணிக்கு குட் நியூஸ்

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் காயத்தில் இருந்து மீண்டுவிட்டதாக தெரிகிறது. இதனால், அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பயிற்சியில் ஈடுபடும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முன்னதாக, ஜெர்மனியில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் NCA-ல் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பில் இருக்கிறார்.
News August 9, 2025
ராமருக்கு போல் சீதாவுக்கும் பிரமாண்ட கோயில்: அமித்ஷா

பீஹார் மாநிலத்தில் சீதாதேவியின் பிறப்பிடமாக கருதப்படும் சீதாமர்ஹியில் உள்ள புனவ்ராதாம் பகுதியில் ஜானகி மந்திர் கோயில் உள்ளது. சீதாதேவியின் கோயிலாக இது கருதப்படுகிறது. அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைக்கப்பட்டது போல், தற்போது இக்கோயிலை ₹882.87 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் அமித்ஷா பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.