News May 16, 2024
ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ₹54 ஆயிரத்தை கடந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹54,360க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹6,795க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1.50 அதிகரித்து ₹92.50க்கும், கிலோ வெள்ளி ₹1,500 அதிகரித்து ₹92,500க்கும் விற்பனையாகிறது.
Similar News
News August 8, 2025
ஆபரண தங்கம் 1 சவரன் விரைவில் ₹80,000-ஐ தாண்டும்!

ஆபரண தங்கத்தின் விலை <<17338724>>1 சவரன் 75,000-ஐ<<>> கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது வெகு விரைவில் ₹80,000-ஐ தாண்டும் என நகை வணிகர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். டிரம்பின் வரி அறிவிப்பு உலக முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திருப்பி இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாம். தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கம் வாங்குற கனவு கனவாவே போயிருமோ?
News August 8, 2025
9-ம் வகுப்பிலே கரியரை தீர்மானிக்கலாம்: அமைச்சர்

சென்னையில் மாநில கல்விக்கொள்கையை CM ஸ்டாலின் வெளியிட்டார். இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், அச்சம் நிறைந்த தேர்வு என்ற நிலையை மாற்றி மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். 9-ம் வகுப்பிலே கரியர் வழிகாட்டி பெற்று மாணவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
News August 8, 2025
ஆணுறுப்பில் மிளகாய் பொடி.. அஜித் மரண வழக்கில் திருப்பம்

கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், சிபிஐ விசாரணையில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணுறுப்பில் மிளகாய் பொடியை தூவி அஜித்தை போலீஸ் சித்ரவதை செய்த தகவல் ஏற்கெனவே வெளியானது. இந்நிலையில், தனிப்படை போலீஸுக்கு மிளகாய்ப் பொடி வாங்கி கொடுத்ததே அஜித்தின் நண்பர் பிரவீன் குமார்தான் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.