News August 8, 2025
ஆணுறுப்பில் மிளகாய் பொடி.. அஜித் மரண வழக்கில் திருப்பம்

கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், சிபிஐ விசாரணையில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணுறுப்பில் மிளகாய் பொடியை தூவி அஜித்தை போலீஸ் சித்ரவதை செய்த தகவல் ஏற்கெனவே வெளியானது. இந்நிலையில், தனிப்படை போலீஸுக்கு மிளகாய்ப் பொடி வாங்கி கொடுத்ததே அஜித்தின் நண்பர் பிரவீன் குமார்தான் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
Similar News
News November 15, 2025
Show-off ஆட்சியில் TN-க்கு எப்படி தொழில்கள் வரும்? EPS

TN-க்கு தொழில் தொடங்க வரவேண்டிய கொரியாவின் ஹ்வாசங் நிறுவனம், ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள EPS, 4 ஆண்டுகளாக பொம்மை முதல்வர் ஷோ காட்டியதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் ஊழல்கள் என சீர்குலைந்துள்ள இந்த ஆட்சியில் எப்படி தொழில் நிறுவனங்கள் TN-க்கு வரும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 15, 2025
பண மழை கொட்டும் 6 ராசிகள்

நாளை(நவ.16) துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி அடைவதால் 6 ராசியினருக்கு அதிர்ஷ்டம். *மிதுனம்: பண வரவு அதிகரிக்கும். *கடகம்: பணியில் ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு. *சிம்மம்: நிலம், சொத்து, வாகனங்களால் பயன் அடையலாம். *கன்னி: வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். *தனுசு: பண வரவு அதிகமாவதால் நிதிநிலை மேம்படும். *மகரம்: வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் ஆசை நிறைவேறும்.
News November 15, 2025
பள்ளிகளில் புதிய மாற்றம்.. இனி யாரும் தப்பிக்க முடியாது!

பள்ளிகளில் ஆய்வுப் பணிகளை மேம்படுத்த ‘பள்ளிப் பார்வை 2.0’ என்ற APP-ஐ அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், 6 முதல் 9-ம் வகுப்பு வரை திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் திறம்பட ஆய்வு செய்யுமாறும், ஆய்வின்போது குறைந்தது 2 மாணவர்களின் நோட்டுகளை சரிபார்க்க வேண்டும் எனவும் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


