News June 16, 2024
பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது

தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகைப் பூ கிலோ ₹1700, கனகாம்பரம் ₹900, சம்பங்கி ₹600, முல்லைப் பூ ₹500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் காரணமாக பல்வேறு வகையான பூக்களை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 15, 2026
தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வைகோ ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக உருவான கட்சி (TVK) அதிமுக கூட்டணிக்கு சென்றாலும், திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
News March 15, 2026
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்த பாகிஸ்தான்!

மத்திய கிழக்கு நாடுகளின் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 30% அளவுக்கு குறைக்க PM ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசுத்துறை வாகனங்களுக்கான எரிபொருளை 50% குறைக்க வேண்டும் என்றும், 60% வாகனங்களை 2 மாதங்களுக்கு இயக்க வேண்டாம் எனவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
News March 15, 2026
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்த பாகிஸ்தான்!

மத்திய கிழக்கு நாடுகளின் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 30% அளவுக்கு குறைக்க PM ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசுத்துறை வாகனங்களுக்கான எரிபொருளை 50% குறைக்க வேண்டும் என்றும், 60% வாகனங்களை 2 மாதங்களுக்கு இயக்க வேண்டாம் எனவும் அவர் ஆணையிட்டுள்ளார்.


