News June 16, 2024

பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகைப் பூ கிலோ ₹1700, கனகாம்பரம் ₹900, சம்பங்கி ₹600, முல்லைப் பூ ₹500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் காரணமாக பல்வேறு வகையான பூக்களை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News January 25, 2026

12 பேரை காதலித்த தமிழ் நடிகை

image

ஒருவரை காதலித்து கரம் பிடிப்பதே பெரிய சோதனையாக இருக்கும் நிலையில், இங்கு ஒருவர் 12 பேரை காதலித்து டேட்டிங் செய்திருக்கிறார். ‘பம்பாய்’, ‘இந்தியன்’, ‘பாபா’ படங்களில் நடித்து தமிழில் ஒரு கலக்கு கலக்கிய மனிஷா கொய்ராலா பீக்கில் இருந்த காலத்தில் 12 பேரை காதலித்துள்ளாராம். கடைசியாக, தொழிலதிபரான சாம்ராட் தஹாலை திருமணம் செய்த அவர், அடுத்த 2 வருடங்களிலேயே அவரை விவகாரத்து செய்துவிட்டார்.

News January 25, 2026

ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டும் போதாது: அன்புமணி

image

மொழிப்போர் தியாகிகள் தினத்தை கடைப்பிடிப்பதன் நோக்கம் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பது மட்டுமல்ல, தமிழை வளர்ப்பதும் தான் என அன்புமணி கூறியுள்ளார். தனது X-ல், தமிழ் கட்டாயப் பயிற்றுமொழி அரசாணை பிறப்பித்து 26 ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். SC-ல் நிலுவையில் உள்ள இதுகுறித்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.

News January 25, 2026

இன்று தேசிய சுற்றுலா தினம்!

image

ஊர் சுற்றிப் பார்க்க யாருக்கு பிடிக்காது! இந்தியாவின் அழகை உலகிற்கு சொல்லும் விழா என இன்றைய நாளை இன்றை குறிப்பிடலாம். ‘அதிதி தேவோ பவ’ என்ற பண்பாட்டை நினைவூட்டும் விதமாகவும், சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜனவரி 25-ல், ‘தேசிய சுற்றுலா தினம்’ கொண்டாடப்படுகிறது. ‘உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள். உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் எது?

error: Content is protected !!