News April 23, 2025

வெளியான தீவிரவாதிகளின் வரைபடம்…

image

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரின் வரைபடங்களை NIA வெளியிட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவதர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலை வைத்து இந்த வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பஹல்காமை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News April 23, 2025

தீவிரவாதிகள் அனைவரையும் வேட்டையாடுவோம்: ராஜ்நாத்

image

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் அனைவரையும் வேட்டையாடுவோம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரைத்துள்ளார். இக்கொடுந்தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் எனவும், தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா சகித்துக் கொள்ளாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற தாக்குதல்களால் இந்தியாவை மிரட்ட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

25 ஆண்டுகளுக்கு முன் இதே பாணியில் தாக்குதல்

image

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்திருக்கும் சூழலில், பஹல்காமில் தாக்குதல் நடந்திருக்கிறது. இதேபோல், 25 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ சீருடை அணிந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் அனந்த்நாக்கின் சித்திசிங்பூரில் உள்ள குருத்வாராவில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 35 அப்பாவி சீக்கியர்கள் உயிரிழந்தனர்.

News April 23, 2025

அமைச்சர் பதவியா? ஜாமினா? செந்தில் பாலாஜிக்கு செக்

image

அமைச்சர் பதவி வேண்டுமா?, ஜாமின் வேண்டுமா என செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் செக் வைத்துள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமைச்சர் பதவியா? ஜாமினா? என்பதை (இரண்டில் ஒன்று) திங்கட்கிழமை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!