News April 23, 2025
வெளியான தீவிரவாதிகளின் வரைபடம்…

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரின் வரைபடங்களை NIA வெளியிட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவதர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலை வைத்து இந்த வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பஹல்காமை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 7, 2025
அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

அண்ணா அறிவாலயத்திற்கு E-Mail மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டு மோப்பநாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அது புரளி என தெரியவந்தது. TN-ல் முக்கிய இடங்களை குறிவைத்து அண்மை காலமாக அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் போலீசாரை திக்குமுக்காட வைக்கிறது.
News November 7, 2025
கலைத்தாயின் செல்ல மகனுக்கு இன்று ஹேப்பி பர்த்டே!

‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ என பாடிய சிறுவன்தான்,
இந்திய சினிமாவுக்கே Dictionary-யாக மாறுவார் என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நடிப்பில் மட்டும் உச்சம் தொட்டதால், அவரை விண்வெளி நாயகன் என புகழவில்லை. அந்த விண்வெளியில் மின்னும் நட்சத்திரங்கள் போல எழுத்து, இயக்கம், எடிட்டிங், தயாரிப்பு, மேக்கப் என அத்தனை துறைகளிலும் பிரகாசித்து கொண்டிருப்பவர். உங்களுக்கு பிடிச்ச கமல் படம் எது?
News November 7, 2025
நீருக்குள் இருந்து காட்சி கொடுக்கும் சிவன்!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியில் மேலமலை என்ற சிறிய மலை குன்று உள்ளது. அக்குன்றில் தலையருவி சிங்கம் சுனையில், 15 அடி ஆழத்தில் ஜீரஹரேஸ்வரர் என்னும் குடைவரைக் கோவில் இருக்கிறது. இக்கோயிலில் குடைந்தே உருவாக்கப்பட்ட சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவராத்திரி அன்று, உள்ளூர் மக்கள் சுனையில் உள்ள நீரை வெளியேற்றிவிட்டு, சிவனை தரிசித்து செல்கின்றனர். SHARE IT.


