News March 17, 2024

இரண்டாவது குழந்தையை பெற்ற மறைந்த பாடகரின் தாய்

image

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுருக்கு குழந்தை பிறந்துள்ளது. 58 வயதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை, சித்துவின் தந்தை பால்கர் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சித்து கடந்த 2022இல் கொலை செய்யப்பட்ட பின், அவரது பெற்றோர்களான சரண் கவுர் (58) பால்கவுர் சிங் (60) ஐவிஎஃப் மூலம் மற்றொரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News December 7, 2025

லோகியின் அடுத்த குக்கிங்.. ஆமிர் கான் அப்டேட்

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆமிர் கான் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. இந்நிலையில், தான் லோகேஷுடன் பேசி வருவதை ஆமிர் உறுதி செய்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு லோகியுடன் பேசியதாகவும், விரைவில் மும்பையில் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது வரை தற்காலிகமாக லோகியின் டைரக்‌ஷனில் கமிட்டாகியுள்ளதாக ஆமிர் ஹிண்ட் கொடுத்துள்ளார். லோகேஷ் – ஆமிர் காம்போ எப்படி இருக்கும்?

News December 7, 2025

அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது: DCM

image

அமித்ஷாவுக்கு எதிராக எந்த கருத்தும் கூறமுடியாத நிலைக்கு EPS தள்ளப்பட்டுள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். அதிமுக இனி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்ற அவர், அது அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை; சொல்லப்போனால் அதிமுகவே இல்லை எனவும் சாடியுள்ளார்.

News December 7, 2025

உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

image

USA குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறிய சில மணிநேரங்களில், உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. 653 ஆளில்லா விமானங்கள், 51 ஏவுகணைகள் மூலம் 700-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் மின்நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு, உலை பாதுகாப்பிற்கான கவலையை எழுப்பியுள்ளது.

error: Content is protected !!