News March 17, 2024
இரண்டாவது குழந்தையை பெற்ற மறைந்த பாடகரின் தாய்

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுருக்கு குழந்தை பிறந்துள்ளது. 58 வயதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை, சித்துவின் தந்தை பால்கர் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சித்து கடந்த 2022இல் கொலை செய்யப்பட்ட பின், அவரது பெற்றோர்களான சரண் கவுர் (58) பால்கவுர் சிங் (60) ஐவிஎஃப் மூலம் மற்றொரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
பிஹார் தேர்தல் முடிவுகள் TN-ல் எதிரொலிக்காது: TTV

2026 தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்று மீண்டும் TTV தினகரன் கூறியுள்ளார். அமமுக இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற அவர், பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது என்றும் TTV கூறியுள்ளார். NDA கூட்டணியில் இருந்து விலகியது முதலே, TVK-க்கு ஆதரவாக TTV பேசி வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாகவுள்ளது.
News November 15, 2025
தூய்மை பணியாளர்களை கைகூப்பி வணங்கிய CM

சென்னை தூய்மையாக இருக்க தூய்மை பணியாளர்கள் தான் காரணம் என CM ஸ்டாலின் பேசியுள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்த அவர், இரவில் தூக்கத்தை தியாகம் செய்து வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், அவர்கள் செய்வது வேலை அல்ல, சேவை என்று கூறிய அவர், அவர்களுக்கு நன்றி தெரிவித்து கைகூப்பி வணங்கினார்.
News November 15, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி

மறைந்த இயக்குநரும், நடிகருமான வி.சேகர் உடல் கோடம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதல் ஆளாக வந்து நடிகர் வையாபுரி அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, இயக்குநர்கள் செல்வமணி, விக்ரமன், பேரரசு மற்றும் காமெடி நடிகர்கள் வரிசையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னணி நடிகர்களும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


