News March 17, 2024
இரண்டாவது குழந்தையை பெற்ற மறைந்த பாடகரின் தாய்

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுருக்கு குழந்தை பிறந்துள்ளது. 58 வயதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை, சித்துவின் தந்தை பால்கர் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சித்து கடந்த 2022இல் கொலை செய்யப்பட்ட பின், அவரது பெற்றோர்களான சரண் கவுர் (58) பால்கவுர் சிங் (60) ஐவிஎஃப் மூலம் மற்றொரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 1, 2025
BREAKING: பொங்கல் பரிசு அறிவித்தார் அமைச்சர்

தைப்பொங்கலை முன்னிட்டு, நவ.15 முதல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். அத்துடன், இந்த முறை 15 ரக சேலைகள், 5 ரகங்களில் வேட்டிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பொங்கல் பரிசுத்தொகையாக ₹5,000 வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில், விரைவில் CM ஸ்டாலின் இதுதொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என <<18160908>>அமைச்சர் சக்கரபாணி<<>> கூறியிருந்தார்.
News November 1, 2025
சபரிமலையில் இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு!

சபரிமலையில் வரும் 17-ம் தேதி மண்டல, மகர விளக்கு பூஜை தொடங்குகிறது. இதனையொட்டி, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (நவ.1) தொடங்குகிறது. ஆன்லைனில் பதிவு செய்ய, <
News November 1, 2025
CM-ஐ குறிவைத்து ‘ஆபரேஷன் MKS ‘: R.S.பாரதி

பயத்தின் காரணமாகத்தான் CM ஸ்டாலினை குறிவைத்து ‘ஆபரேஷன் MKS ‘ என்ற அடிப்படையில் மோடி பேசுவதாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆங்காங்கே போய் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது பாஜகவுக்கு, குறிப்பாக மோடி, அமித்ஷாவுக்கு கை வந்த கலை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகிற வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.


