News March 17, 2024

இரண்டாவது குழந்தையை பெற்ற மறைந்த பாடகரின் தாய்

image

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுருக்கு குழந்தை பிறந்துள்ளது. 58 வயதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை, சித்துவின் தந்தை பால்கர் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சித்து கடந்த 2022இல் கொலை செய்யப்பட்ட பின், அவரது பெற்றோர்களான சரண் கவுர் (58) பால்கவுர் சிங் (60) ஐவிஎஃப் மூலம் மற்றொரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News December 3, 2025

வேலூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

வேலூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <>கிளிக்<<>> செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 3, 2025

பொங்கல் பரிசு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000?

image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, இந்தாண்டு பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு ₹5000 வழங்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், பொங்கலுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ள நயினார், பொங்கல் பரிசுக்காக கூட்டுறவு வங்கிகளை அடமானம் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

News December 3, 2025

உலகளவில் இமயமலைக்கு கூடும் மவுசு!

image

உலகளவில் டாப் டிரெண்டிங் டெஸ்டினேஷன் பட்டியலில் (2026) இமயமலை முதல் இடத்தை பிடித்துள்ளது. திரில், இயற்கை, கலாசாரம், ஆன்மிகம் என அனைத்தும் கலந்த இடமாக இமயமலை இருப்பதால் டிராவலர்ஸ் இங்கு வருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சிட்டிக்கு டூர் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி, இயற்கை வளமிக்க இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலைக்கு டிராவலர்ஸ் வந்திருப்பதை இது காட்டுகிறது. உங்களுக்கு இமயமலை போக ஆசையா?

error: Content is protected !!