News September 30, 2025
சீனா வரை அதிர்வலையை ஏற்படுத்திய கரூர் சம்பவம்

கரூரில் பலியானோருக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியான்குன், பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். சீனாவின் இரங்கல் செய்தி மூலம் கரூர் பெரும் துயரச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பது அறியமுடிகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?
Similar News
News September 30, 2025
விஜய்க்கு துரை வைகோ கொடுத்த அட்வைஸ்

மற்ற கட்சிகளை போல தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்க, ஒரு அமைப்பை விஜய் உருவாக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். இது விஜய்யுடைய கட்சிக்கும் நல்லது, பொதுமக்களுக்கும் நல்லது, அரசுக்கும் நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் தவெக மாநாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை சுட்டிக்காட்டி இதனை துரை வைகோ கூறியுள்ளார்.
News September 30, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியின் MPC கூட்டத்தில் முடிவெடுத்து, நாளை அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அக்டோபர் தொடக்க நாளான நாளை வட்டி குறைப்பு அறிவிப்பு வெளியானால், தனிநபர் கடன், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியும் குறையும். இது லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 30, 2025
₹35,000 சம்பளம்: தமிழக அரசில் 1,096 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகத்தில் காலியாகவுள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 1,096 பணியிடங்களை அறிவித்துள்ளது. கல்வித்தகுதி: 10th, டிகிரி. சம்பளம்: ₹12,000 – ₹35,000 வரை (பதவிகளுக்கேற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.14. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <