News May 15, 2024
‘இம்பேக்ட் வீரர்’ விதி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

ஐபிஎல்லில் அறிமுகம் செய்யப்பட்ட ‘இம்பேக்ட் வீரர்’ விதி நன்றாக இருப்பதாக, ராஜஸ்தான் வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இது ஒரு நல்ல விதி என்று தான் நினைப்பதாகவும், கடந்த ஆண்டு ஐபிஎல்லில் தாங்கள் நிறைய இறுக்கமான முடிவைப் பெற்றோம் என்பதை அனைவரும் பார்த்தனர் என்றும் கூறினார். மேலும், இந்த விதி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 11, 2025
காலையில் உடல் சுறுசுறுப்பாக இருக்க இந்த தேநீர் குடிங்க!

சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், உடலை சுறுசுறுப்பாக்கவும் மசாலா டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* கிராம்பு, பச்சை ஏலக்காய், மிளகுத்தூள், இலவங்கப்பட்டை & பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
*இதனுடன் ஜாதிக்காய், உலர்ந்த இஞ்சி தூள் & குங்குமப்பூ சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
*டீ செய்யும் போது, அதில் இந்த பொடியை கலந்தால், மசாலா டீ ரெடி. SHARE IT.
News September 11, 2025
4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று விடுமுறை

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி இன்று (செப்.11) 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகள், பார்கள் செயல்படாது என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். உத்தரவை மீறி மது விற்பனை செய்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News September 11, 2025
சமூகத்திற்காக வாழ்வை அர்ப்பணித்தவர் மோகன்: மோடி

சமூக நல்லிணக்கம், சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்த தனது முழு வாழ்க்கையையும் மோகன் பகவத் அர்ப்பணித்ததாக, PM மோடி கூறியுள்ளார். பகவத்தின் 75-வது பிறந்தநாளான இன்று, அவருக்கு வாழ்த்து கூறியுள்ள மோடி, நூற்றாண்டு கண்ட RSS மூலம் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 75 வயதை கடந்தவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற மோகன் வலியுறுத்தி வந்த நிலையில், மோடி இவ்வாறு புகழ்ந்துள்ளார்.