News August 6, 2025
‘மாபெரும் தமிழ்க் கனவு’ மீண்டும் தொடக்கம்

கல்லூரி மாணவர்களிடையே தமிழர் மரபை பரப்பும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகள் ஓராண்டு இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் தொடங்குகிறது. கோவை, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
Similar News
News August 6, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது

இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி ஆக.15-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். அதேபோல், அதற்கு அடுத்து சனி, ஞாயிறு (ஆக.16 & 17) என பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இதனால், பலரும் சொந்த ஊருக்கு செல்ல பலரும் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். நீங்க புக் பண்ணீட்டீங்களா?
News August 6, 2025
அனைத்து போலீசாரும் ஆயுதம் ஏந்த வேண்டும்: அண்ணாமலை

திருப்பூரில் SSI படுகொலை சம்பவமானது நமது சமூகம் அழிவுப்பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் உள்ள அரசாலும், அதிக போதை உள்ள மதுவாலும் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறிய அண்ணாமலை, துணை ஆய்வாளர் மற்றும் அதற்கு கீழ் பொறுப்பு வகிக்கும் அனைத்து போலீசாரும் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.
News August 6, 2025
ஆபாசமாக நடித்ததாக நடிகை மீது வழக்கு

பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் மீது, கோர்ட் உத்தரவின் பேரில் எர்ணாகுளம் போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. தன் படங்களில் திட்டமிட்டே ஆபாசமான, வல்கரான காட்சிகளில் நடித்துள்ளதாகவும், அந்த காட்சிகளை சோஷியல் மீடியா, ஆபாச வலைதளங்களில் பகிர்ந்து பணம், பிரபலத்தை பெற அவர் முயன்றதாக கூறி ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார். ரதி நிர்வேதம், சால்ட் அண்ட் பெப்பர், களிமண்ணு உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.